சகோதரர்கள் மத்தியில் உயர்வு
தேவனுடைய பிள்ளைகளை அழிக்கின்றவன் பிசாசு. சதாகாலமும் யாரையாவது அழித்து விடலாமா என்று காரணம் தேடி சுற்றித் திரிகின்றான்(1 பேதுரு 5:8). பிசாசைப்போல் சில மனிதர்களும் இருக்கின்றார்கள். குறிப்பாக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட பிள்ளைகளை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதும், அவர்களுடைய உயர்வை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய யோசனை. இப்படித்தான் பரிசுத்த வேதத்தில் ஒரு கூட்ட சகோதரர்கள் இருந்தார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையை அழிக்க நினைத்தார்கள். முடிவில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும், தேவன் எப்படி கிரியை செய்தார் என்பதனையும் இந்தச் செய்தியில் தியானிப்போம். இது தீர்க்கதரிசன செய்தி ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உங்களுடன் பேசுவார். யாக்கோபின் குமாரன் யோசேப்பைக் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். பரிசுத்த வே...