வேதாகமம் எழுதும் தேர்வு-2024
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும் அதன்படி கடந்த 2024-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள ஏசாயா, எரேமியா மற்றும் புலம்பல் புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams), அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2024- ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் (12,000) மேற்பட்டோர் பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள் 2024 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2024 - க்குள் எழுதிய நோட்டை 64 பேர் நேரிலும், 151 பேர் போஸ்ட் மூலமாகவும், 430 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 645
பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 564 பேர் தமிழிலும், 81 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.
இப்பொழுதும் முதல் சுற்றில் எல்லா நோட்டுகளும் சரிபார்க்கப்பட்டுவிட்டது. உங்கள் நோட்டும் எங்களால் சரிபார்க்கப்பட்டுவிட்டது. முதல் சுற்றில் எல்லாம் சரியாக எழுதியுள்ளீர்களா? இரண்டாம் சுற்றுக்கு தகுதியானவரா? நீங்கள் செய்த தவறுகள் என்னென்ன? என்றும், அதன் Photo போன்ற விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நன்றாக வாசித்துப் பார்த்து, ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 20-06-2025 க்குள் ஆதாரத்துடன் எங்களுக்கு 8608833150 அல்லது 8608096748 என்ற எண்ணில் தெரியப்படுத்துங்கள். (குறிப்பு: உங்கள் வேதாகமத்தில் உள்ளதைப் போல் நீங்கள் சரியாக எழுதியிருந்தும், அதை தவறு என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தால், உங்கள் வேதாகமத்தில் உள்ள வசனத்தின் Photo –வை Whats App மூலமாக எங்களுக்கு அனுப்புங்கள். அதை பரிசீலிக்கின்றோம். கடைசி நாளான 20-06-2025 க்கு பின்பு நீங்கள் கூறும் எவ்விதமான ஆட்சேபனையும் எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாது.
இந்த
முடிவுகள் முறைப்படி உங்கள் Whats App எண்ணுக்கு அனுப்பப்படும். மேலும், போன்கால்
மூலமாகவும் தெரியப்படுத்துவோம். அதன் பின்புதான் முதல் சுற்றுக்கான அதிகாரபூர்வமான
முடிவுகள் அறிவிக்கப்பட்டு யார் யார் இரண்டாம் சுற்றுக்கு தகுதியுள்ளவர்கள் என்ற
விபரங்கள் தெரிவிக்கப்படும்.
(குறிப்பு: மொத்தம் மூன்று பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே, மூன்று
நபர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவரை எப்படி சரிபார்த்தும் தவறு
கண்டுபிடிக்கமுடியாத மிகச் சரியாக எழுதிய
நபர்கள் மூன்றுக்கும் அதிகமானோர்
இருப்பதினால், ஒரு தவறு வந்தாலும் அவர்கள் அடுத்த சுற்றுக்கான தகுதியை
இழக்கின்றார்கள்.)
(கடந்த வருடங்களைப்போல இந்த வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு-2025 நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு
பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதும் முதல் மூன்று
பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். *முதல் பரிசு : நான்கு கிராம் தங்கம்(4
grams). இரண்டாம் பரிசு : மூன்று கிராம் தங்கம் (3 grams). மூன்றாம் பரிசு :
இரண்டு கிராம் தங்கம் (2 grams).* இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல்
பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.)
எழுதிய
நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 2025 ம் வருடம் டிசம்பர் 31 –ம் தேதி (31-12-2025)
வேதப்பகுதி: எசேக்கியல் முதல் மல்கியா வரை
மொத்த வசனங்கள் : 2680
மொத்த அதிகாரங்கள் : 127
மொத்த புத்தகங்கள் : 14
தேர்வினை பற்றிய விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். Click Here
இந்த தேர்வு சம்பந்தமான
Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும். மேலும் எங்களது சேனலை (Channal) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்.
Whats App Channel : CLICK HERE
You Tube : CLICK HERE
Telegram : CLICK HERE
எழுதிய நோட்டுகளை
அனுப்பியவர்களின் விபரங்கள்:
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2024 – ல்
அநேகர் தேர்வினை எழுதி நோட்டுகளை அனுப்பியுள்ளார்கள். அவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துக்கொள்ள இந்த லிங்கை
கிளிக் செய்யவும். CLICK HERE
முதல் சுற்றுக்கான முடிவை
தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
முதல் சுற்றுக்கான முடிவை தெரிந்துக்கொள்ள வேண்டுமா? என்பதனை அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் உங்கள் பதிவு எண் (Reg. No) மற்றும் RvE எண்ணை டைப் செய்யுங்கள்.( Example : Qz100 இதில் Q என்பது பெரிய எழுத்திலும்(Capital Letter) z என்பது சிறிய எழுத்திலும் (Small Letter) இருக்க வேண்டும். மற்றும் RvE100 என்பதில் R என்பது பெரிய எழுத்திலும்(Capital Letter) v என்பது சிறிய எழுத்திலும் (Small Letter) ) E என்பது பெரிய எழுத்திலும்(Capital Letter) இருக்க வேண்டும்.
எழுதிய நோட்டுகளை
அனுப்பியவர்களின் விபரங்கள் :
Comments
Post a Comment