வீட்டோடே மாப்பிள்ளை
சிலர் தான் பெண்ணெடுத்த மாமனார் வீட்டிலேயே செட்டிலாகி, வீட்டோடே மாப்பிள்ளையாக இருந்து, மறுபெற்றோராகிய தன்னுடைய மாமனார், மாமியாருக்கு பணிவிடை செய்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களை கவனிக்காத இந்நாட்களில், தன்னுடைய மறுபெற்றோர்களை கவனித்து, அவர்களுடனே இருந்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, பராமரிப்பது மிகவும் நல்ல காரியம். இந்த சுபாவம் எல்லாருக்கும் கிடையாது. இது பாவம் அல்ல, தேவனுடையப் பார்வையில் குற்றமும் அல்ல. ஆனால், சில சாபத்தினிமித்தமும், தேவக்கோபத்தினிமித்தமும், இப்படிப்பட்ட அடிமைத்தனம் தொடர்ந்து வரும். பெற்றோர்களை பார்க்க முடியாமலும், இருதயத்தில் கொஞ்சம்கூட சமாதானம் இல்லாமலும் பெண்ணெடுத்த மாமனார் வீட்டிலேயே அடிமையாக, வீட்டோடே மாப்பிள்ளையாக இருப்பார்கள். இது ஒரு அடிமைத்தனத்தின் சாபமாகும். ...