Posts

Showing posts from June, 2022

பாவ எதிர்ப்புச்சக்தி

Image
    சகல துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ்ச்சி, பெருமை, வல்லமை எல்லாம் பரலோகப்பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாவதாக ஆமென். பாவ எதிர்ப்புச்சக்தி என்ற தலைப்பில் தீர்க்கதரிசன செய்தியை விரிவாக வாசித்து தியானிப்பதற்கு லிங்கை கிளிக் செய்து ஆவலோடு வந்த உங்களை பரலோகதேவன் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. வேதச்சத்தியங்களை எளிதாக விளங்க செய்வாராக. கிருபையும் சமாதானமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாவதாக ஆமென்.      பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் பாவ எதிர்ப்புச்சக்தியை அதிகமாக பெற்றிருந்தான். பரலோகதேவன் அவனுக்குள் அதை வைத்து இருந்தார். அதனால்தான் நெருங்கி வந்த பாவச் சோதனைகளில், அதை உதறித்தள்ளி விட்டு சென்றான். அந்த மனிதன் யார் என்று கேட்டால் யோசேப்பு என்பது நம்முடைய பதிலாக இருக்கும். ஆம் அந்த மனிதன் யோசேப்புத்தான். அவன் எப்படி பாவத்தினை உதறி தள்ளினான்? அவனுக்குள் எப்படி பாவ எதிர்ப்புச்சக்தி இருந்தது? பரலோக தேவன் அவனுக்குள் அதை எப்படி கொண்டு வந்தார்? நாமும் பாவ எதிர்ப்புச்சக்தியை ப...

விசுவாசமே....

Image
               விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு   பிரியமாக இருக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (எபிரெயர். 11:6) கடுகு விதையளவு விசுவாசம் இல்லாமல் ஜெபிக்க முடியாது, வேதத்தினை தியானிக்க முடியாது, சபைக்கு செல்லமுடியாது, பரலோக தேவனிடமிருந்து எந்த ஒரு அற்புதத்தினையும் பெற்றுக்   கொள்ள முடியாது. நம் தேவன் மகாப்பெரியவர்; சர்வவல்லதேவன்; வானத்தையும், பூமியையும் உருவாக்கினவர். அப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் நம் வாழ்க்கையில் சின்னதாய் சிறியதாய் ஒன்றை செய்ய வேண்டும் என்றாலும், விசுவாசம் ரொம்ப அவசியமான ஒன்றாகும். கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால் கூட போதுமானது. ஆனால், விசுவாசமில்லை என்றால் பெரிய தேவனால் சின்ன ஒன்றினையும் செய்ய முடியாது.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் ஏராளமான அற்புதங்களை செய்தார். திரள்கூட்ட ஜனங்கள் அற்புதங்களை பெற்றுக் கொண்டார்கள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இன்றைக்கும் அற்புதங்களைச் செய்கின்றார். அது உண்மை. சரி ! யாருடைய விசுவாசத்தைப் பார்த்து அற்புதங்களை செ...