பாவ எதிர்ப்புச்சக்தி

சகல துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ்ச்சி, பெருமை, வல்லமை எல்லாம் பரலோகப்பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாவதாக ஆமென். பாவ எதிர்ப்புச்சக்தி என்ற தலைப்பில் தீர்க்கதரிசன செய்தியை விரிவாக வாசித்து தியானிப்பதற்கு லிங்கை கிளிக் செய்து ஆவலோடு வந்த உங்களை பரலோகதேவன் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. வேதச்சத்தியங்களை எளிதாக விளங்க செய்வாராக. கிருபையும் சமாதானமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாவதாக ஆமென். பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் பாவ எதிர்ப்புச்சக்தியை அதிகமாக பெற்றிருந்தான். பரலோகதேவன் அவனுக்குள் அதை வைத்து இருந்தார். அதனால்தான் நெருங்கி வந்த பாவச் சோதனைகளில், அதை உதறித்தள்ளி விட்டு சென்றான். அந்த மனிதன் யார் என்று கேட்டால் யோசேப்பு என்பது நம்முடைய பதிலாக இருக்கும். ஆம் அந்த மனிதன் யோசேப்புத்தான். அவன் எப்படி பாவத்தினை உதறி தள்ளினான்? அவனுக்குள் எப்படி பாவ எதிர்ப்புச்சக்தி இருந்தது? பரலோக தேவன் அவனுக்குள் அதை எப்படி கொண்டு வந்தார்? நாமும் பாவ எதிர்ப்புச்சக்தியை ப...