பாவ எதிர்ப்புச்சக்தி
சகல துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ்ச்சி,
பெருமை, வல்லமை எல்லாம் பரலோகப்பிதாவாகிய தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும்,
பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கும் உண்டாவதாக ஆமென். பாவ எதிர்ப்புச்சக்தி என்ற தலைப்பில்
தீர்க்கதரிசன செய்தியை விரிவாக வாசித்து தியானிப்பதற்கு லிங்கை கிளிக் செய்து ஆவலோடு
வந்த உங்களை பரலோகதேவன் ஆசீர்வதித்து உயர்த்துவாராக. வேதச்சத்தியங்களை எளிதாக விளங்க
செய்வாராக. கிருபையும் சமாதானமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாவதாக
ஆமென்.
பரிசுத்த வேதத்தில் ஒரு மனிதன் பாவ எதிர்ப்புச்சக்தியை
அதிகமாக பெற்றிருந்தான். பரலோகதேவன் அவனுக்குள் அதை வைத்து இருந்தார். அதனால்தான் நெருங்கி
வந்த பாவச் சோதனைகளில், அதை உதறித்தள்ளி விட்டு சென்றான். அந்த மனிதன் யார் என்று கேட்டால்
யோசேப்பு என்பது நம்முடைய பதிலாக இருக்கும். ஆம் அந்த மனிதன் யோசேப்புத்தான். அவன்
எப்படி பாவத்தினை உதறி தள்ளினான்? அவனுக்குள் எப்படி பாவ எதிர்ப்புச்சக்தி இருந்தது?
பரலோக தேவன் அவனுக்குள் அதை எப்படி கொண்டு வந்தார்? நாமும் பாவ எதிர்ப்புச்சக்தியை
பெற என்ன செய்ய வேண்டும்? என்று மிக ஆழமான இரகசியங்களை இங்கே விரிவாக தியானிப்போம்.
ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உதவிச் செய்வார். வாருங்கள் தீர்க்கதரிசன
செய்திகளுக்குள் செல்லுவோம்.
யாக்கோபின் குமாரனான யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டான். போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை விலைக்கு வாங்கினான். தன் வாலிப வயதில் இருந்தே போத்திபார் என்ற எகிப்து தேசத்தான் வீட்டில் அடிமையாக வேலை செய்தான். கர்த்தர் அவனோடு இருந்தார். ஆதலால், அவன் செய்த எல்லா காரியங்களும் வாய்த்தது. அடிமையாக இருந்தவன் வேலைக்காரனானான். பின்பு ஊழியக்காரனாகவும், விசாரணைக்காரனாகவும் உயர்த்தப்பட்டான். கடைசியில் போத்திபார் வீட்டிற்கே அதிபதியாக மாறினான். பரலோக தேவன் அவ்வளவாய் அவனை உயர்த்தினார். உயர்ந்த அடைக்கலத்தில் வைத்தார்.
இந்த
நேரத்தில்தான் ஒரு பாவச் சோதனை ஒன்று அவனை நெருக்குகின்றது. யோசேப்பு அழகான ரூபமும்,
சவுந்தரிய முகம் உள்ளவனாகவும் இருந்தான். போத்திபாரின் மனைவி யோசேப்பின் அழகில் மயங்கி,
அவன் மேல் ஆசைப்பட்டு என்னோடு உடலுறவு கொள் என்று கூறினாள். அவனோ தேவனுக்கு விரோதமாக
பாவம் செய்ய மாட்டேன் என்று சொல்லி No என்று சொல்லிவிட்டான். அழகில் மயங்கிய அவளோ அவனைவிட்டப்பாடில்லை.
தினம் தினம் அவனோடு இப்படிப் பேசினாள். யோசேப்பை பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய பாலியல்
ஆசையை கூறினாள். அவன் கொஞ்சம் கூட அதற்கு சம்மதிக்கவில்லை.
அவளுடன் இருக்கவும் உடலுறவு கொள்ளவும் விரும்பவில்லை.
இப்படி
இருக்க ஒரு நாள் தன் வேலையை செய்ய வீட்டிற்குள் சென்றான். அந்த நேரத்தில் மற்ற மனிதர்கள்
யாரும் அங்கே இல்லை. இந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் பயன்படுத்திக் கொள்ள நினைத்த
போத்திபார் மனைவி, அவனுடைய வஸ்திரத்தை பற்றிப்பிடித்து, என்னோடு உடலுறவு கொள் என்று
கூறினாள். அவனோ வஸ்திரத்தை அவள் கையில் விட்டு விட்டு வெளியே ஓடிப் போனான். நெருங்கிவந்த
பாவத்தினை தள்ளிவிட்டான். பாலியல் பாவத்தினை எளிதாக ஜெயமெடுத்தான்.
எப்படி
அவனால் முடிந்தது? நெருங்கி வந்த பாவத்தினை எப்படி உதறித் தள்ளினான்? என்பது அனைவரின்
கேள்வியாக இருக்கும். அதற்கு காரணம் அவனுடைய ஆவிக்குரிய மனிதனில் காணப்பட்ட பாவ எதிர்ப்புச்சக்திதான்
காரணமாகும். அதுதான் துணிகரமான பாவம் செய்யாதபடிக்கு தடுத்தது.
ஒரு மனிதனுக்குள்
அல்லது வாலிபருக்குள், ஊழியர்களுக்குள் பாவ எதிர்ப்புச்சக்தி இருக்குமென்றால், நெருங்கி
வரும் பாவங்களைச் செய்யாதபடிக்கு அது தடுக்கும். நெருங்கி வரும் பாவங்களை எளிதாக மேற்கொள்ளலாம்.
எனவே, பாவ எதிர்ப்புச் சக்தியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதை
வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! வாலிபர்களே! பாவங்கள் உங்களை நெருங்கி வருகின்றதா?
பாலியல் பாவங்கள் துரத்துகின்றனவா? பாவ எதிர்ப்பு சக்தியை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
எளிதாக பாவங்களை மேற்கொள்ளலாம். பாவ எதிர்ப்புச்சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். பரலோகதேவன்
நிச்சயமாக தருவார். ஆமென்.
Bro.Vinoth Samuel பாவ எதிர்ப்புச்சக்தியை பெற்றுக்கொள்
என்று சொல்கின்றீர்களே! ஆனால், எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே.
எனக்கு கொஞ்சம் ஆலோசனைத் தாருங்கள் என்பதாய் நீங்கள் கேட்கலாம். என்னுடைய பெயர்
T.Vinoth Samuel. பரலோக தேவன் கொடுத்த இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்தினை நான்
தான் செய்து வருகின்றேன். இது ஒரு தீர்க்கதரிசன ஜெப ஆலோசனை ஊழியம். கண்டிப்பாக ஆலோசனைகளைத்
தருகின்றேன். இனிதான் முக்கியமான செய்திக்குள் சென்று, மிக ஆழமான இரகசியங்களை கற்றுக்
கொள்ளப் போகின்றோம். பரிசுத்த ஆவியானவர் பலத்தவிதமாக இடைப்படுவாராக ஆமென்.
போத்திபாரின்
வீட்டிற்கு அடிமையாக சென்ற யோசேப்புக்கு முதலில் எந்த விதமான உயர்வும் கிடைக்கவில்லை.
முதலில் அடிமையாக இருந்தான். பின்பு வேலைக்காரனாகவும், ஊழியக்காரனாகவும், விசாரணைக்காரணமாகவும்
உயர்த்தப்பட்டான். பொதுவாக அடிமைகளை யாரும் மதிக்கமாட்டார்கள். நெருங்கி தன் பக்கத்தில்
இருக்க அனுமதிக்கமாட்டார்கள். தூரத்தில்தான் இருக்கவேண்டும். அப்படி அவன் அடிமையாக
இருக்கும்போது போத்திபாரின் மனைவியை விட்டு தூரத்தில் தான் இருந்தான். அலங்கோலமாய்
அசிங்கமாய் இருந்தான். அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. அவனை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
அந்த நேரத்தில் அவனுக்கு வெளிப்படையான எந்த
சோதனையும் வரவில்லை. சொல்லப்போனால் அவள் அவனிடம் பேசியிருக்கவே மாட்டாள். ஆனால், அவனுடைய
ஆவியில் பலவிதமான சோதனைகளைப் பிசாசுக் கொண்டு வந்திருப்பான். அவளிடம் இருந்துவரும்
விபச்சார ஆவி அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் பாவ எண்ணங்களை கொடுத்திருக்கும். யோசேப்புக்கும்
அசுத்த எண்ணங்களை கொடுத்து, உணர்வுகளைத் தூண்டி
இருக்கும். அசுத்த கனவுகள் வந்திருக்கும். அசுத்த நினைவுகள் அதிகமாக வந்திருக்கும்.
இது ஆவியில் நடக்கும் ஒரு போராட்டமாகும்.
இன்றைக்கும்
சில வாலிபர்களுக்கும் வாலிபப்பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட போராட்டங்கள் வரும். வேலை
செய்யும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ யாரோ ஒருவரைக் குறித்து தவறான எண்ணங்கள்
வருவதுண்டு. இதற்கு சிலர் எதிர்த்துப் போராடுவார்கள். பலர் அதை நினைத்து, உணர்ச்சிகளைத்
தூண்ட இடம் கொடுத்து, கனவுலகத்தில் வாழ்வார்கள். ஆனால், யோசேப்பு அப்படி இடம் கொடுக்கவில்லை.
அந்த சிந்தனைக்கு எதிராக போராடினான். சிந்தனைக்கு எதிர்த்து நின்றான். சிலர் ஒரு நாள்
இரண்டு நாள் போராடி விட்டு வெற்றியை எதிர்பார்ப்பார்கள். இவன் ஒரு நாள் இரண்டு நாள்
அல்ல பல நாட்கள் போராடினான். சிந்தனைக்குள் பாவம் செல்லாதபடித் தடுத்தான். போராடப்
போராட அது அவனுக்குள் ஒரு எதிர்ப்பு சக்தியாக மாறி விட்டது. அது எதிர்ப்பு சக்தியாக
அவனுடைய ஆவிக்குரிய மனிதனுக்குள் சென்றுவிட்டது.
அடிமைத்தனத்தில்
இருக்கும்போது குறிப்பிட்ட அளவு போராட்டம் வந்திருக்கும். அதை ஜெயமெடுத்தான். பாவ எதிர்ப்புச்சக்தி
கிடைத்தது. இரண்டாவது வீட்டிற்கு வேலைக்காரன் ஆனான். இப்பொழுது போராட்டங்கள் கொஞ்சம்
அதிகமாகவே வந்திருக்கும். அதையும் ஜெயமெடுத்தான். இப்படி ஒவ்வொரு நிலையிலும் வந்த போராட்டத்தினை ஜெயமெடுத்தான். அது அவனுக்கு எதிர்ப்புச்சக்தியை
அதிகரிக்கச் செய்துவிட்டது. ஆவியானவர் அவனுடைய ஆவியில் எதிர்புச்சக்தியை அதிகரித்துவிட்டார்.
இப்பொழுது
அவனுக்கு உயர்வுக் கிடைத்தது. போத்திபாரின் வீட்டிற்கு அதிகாரியாகவும் அதிபதியாகவும்
மாறிவிட்டான். போத்திபாரின் மனைவியோடு நெருங்கிப் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்த நேரத்தில்தான் பாவச் சோதனை வருகின்றது. குறிப்பாக பாலியல் பாவச்சோதனை வெளிப்படையாக
வருகின்றது. அவளோ விருப்பப்பட்டு யோசேப்பை பார்த்து என்னோடு உடலுறவு கொள் என்று சொன்னாள்.
ஆனால், அவனுக்குள் இருந்த பாவ எதிர்ப்புச்சக்தி பாவம் செய்யாதபடிக்கு தடுத்தது. அவள்
வஸ்த்திரத்தைப் பிடித்து வா என்று சொன்னாள் இவனோ நோ என்று சொல்லிவிட்டான். கடைசியில்
மகிமையாக எகிப்து தேசத்துக்கே அதிபதியாக உயர்த்தப்பட்டுவிட்டான்.
இதை வாசிக்கின்ற
வாலிப பிள்ளைகளே! தூரத்தில் இருக்கும்போதே வருகின்ற பாவ எண்ணங்களுக்கு எச்சரிக்கையாக
இருந்து அதை மேற்கொள்ளுங்கள். தூரத்தில் இருக்கும் போதே ஒருவர் மூலமாக வரும் பாவ சிந்தனைகளுக்கும், ஆவிக்குரிய போராட்டங்களுக்கு
எதிர்த்து நில்லுங்கள். சிந்தனையில் வரும் போராட்டங்களோடு யுத்தம் செய்யுங்கள். பாவ
எதிர்ப்புச் சக்தி உக்களுக்குள் உருவாகும். பரிசுத்த ஆவியானவர் உருவாக்குவார்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment