விசுவாசமே....


         

    விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு  பிரியமாக இருக்கக்கூடாது என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (எபிரெயர். 11:6) கடுகு விதையளவு விசுவாசம் இல்லாமல் ஜெபிக்க முடியாது, வேதத்தினை தியானிக்க முடியாது, சபைக்கு செல்லமுடியாது, பரலோக தேவனிடமிருந்து எந்த ஒரு அற்புதத்தினையும் பெற்றுக்  கொள்ள முடியாது. நம் தேவன் மகாப்பெரியவர்; சர்வவல்லதேவன்; வானத்தையும், பூமியையும் உருவாக்கினவர். அப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன் நம் வாழ்க்கையில் சின்னதாய் சிறியதாய் ஒன்றை செய்ய வேண்டும் என்றாலும், விசுவாசம் ரொம்ப அவசியமான ஒன்றாகும். கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால் கூட போதுமானது. ஆனால், விசுவாசமில்லை என்றால் பெரிய தேவனால் சின்ன ஒன்றினையும் செய்ய முடியாது.

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் ஏராளமான அற்புதங்களை செய்தார். திரள்கூட்ட ஜனங்கள் அற்புதங்களை பெற்றுக் கொண்டார்கள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இன்றைக்கும் அற்புதங்களைச் செய்கின்றார். அது உண்மை. சரி ! யாருடைய விசுவாசத்தைப் பார்த்து அற்புதங்களை செய்தார்? இன்றைக்கும் யாருடைய விசுவாசக் கிரியைகளைக் கண்டு அற்புதம் செய்கின்றார்? அவரிடம் இருந்து அற்புதங்களை பெற்றுக்கொள்ள யாருக்கெல்லாம் விசுவாசம் வேண்டும்? எப்படிப்பட்ட விசுவாசம் வேண்டும்? அதைக் குறித்து இங்கு விரிவாக தியானிப்போம்.

  1.தனிப்பட்ட விசுவாசம்

 யாரெல்லாம் பரலோக தேவனிடத்திலிருந்து அற்புதங்களைப் பெற காத்திருக்கின்றார்களோ அவர்களுடைய தனிப்பட்ட விசுவாசத்தினையும், விசுவாசக் கிரியைகளைக் கண்டு அற்புதங்களைச் செய்கின்றார்.

    பன்னிரண்டு வருடம் பெரும்பாடுள்ள ஒரு பெண்ணைக் குறித்து பரிசுத்த வேதத்தில் வாசிக்கிறோம். அவள் தன்னுடைய பெலவீனம் நீங்க அநேக வைத்தியர்களிடம் சென்றாள். தனக்கு உண்டானவைகளை எல்லாம் விற்று செலவழித்தாள். அநேக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும், கொஞ்சம்கூட அவளுக்கு குணமடையவில்லை. இதனால், அதிக வருத்தம் வேதனைதான் கிடைத்தது.

  இந்த சூழ்நிலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்படுகின்றாள். அவர் செய்த அற்புதங்களை யாராவது சொல்லி இருப்பார்கள். அதை கேட்க கேட்க அவளுக்கு விசுவாசம் வந்தது.(ரோமர் 10:17) அந்த விசுவாசம் வாயின் அறிக்கையாக வெளிப்பட்டது. ”நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சுகமாவேன்” என்று சொல்லி அறிக்கையிட்டாள். அதன்படி, அவருக்குப் பின்னால் வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.

  என்ன ஆச்சரியம்'! தொட்ட உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுப் போயிற்று. பரலோக தேவனிடமிருந்து அற்புதத்தைப் பெற்றுக்கொண்டாள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமை இதை செய்தது. மகளே! உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் சாட்சிக் கூறினார்.(மாற்கு 5:25-34)

  இந்த நாட்களிலும், நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தைப் பார்க்கின்ற தேவன் அற்புதங்களைச் செய்கின்றார். தனிப்பட்ட விசுவாசத்தில் நாம் பெருகும் போது அற்புதங்களைப் பெற்றுக்கொள்வது நிச்சயம்.

2.மற்றவர்களின் விசுவாசம்:-

   பரலோக அற்புதத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் விசுவாசம் சில நேரங்களில் அற்பமாக இருக்கும். அப்பொழுது, மற்றவர்களின் விசுவாசத்தைப் பார்த்து அற்புதங்களைச் செய்கின்றார்.

 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் ஒரு திமிர்வாதக்காரனை நான்கு பேர் சுமந்துக் கொண்டு, அவரிடத்தில் வந்தார்கள். திரளான மக்கள் இருந்ததினால் அவர்களால் உள்ளே வர முடியவில்லை. எனவே, அவர் இருந்த அந்த வீட்டின் கூரையைப் பிரித்து திறப்பாக்கினார்கள். கூரையை திறப்பாக்குவது என்பது எளிதான காரியமல்ல. நான்கு பேரும் ஒரே மனதோடும் ஒரே நம்பிக்கையோடும் வேலைச் செய்ய வேண்டும். ஒருவருக்கு விசுவாசம் குறைந்தால் கூட வேலை செய்யாமல் பின் வாங்கி இருப்பார்கள். ஆனால், நான்கு பேரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சென்றால் நிச்சயமாக சுகம் கிடைக்கும் என்று விசுவாசித்தார்கள். அதே விசுவாசத்தோடு வேலைச்   செய்தார்கள்.   விசுவாசத்தினைக் கிரியைகள் மூலமாக அறிக்கையிட்டார்கள். கூரையைத் திறப்பாக்கி திமிர்வாதக்காரனை படுக்கையோடு அவர் முன்பாக இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நன்றாக இந்த வார்த்தையை கவனியுங்கள். அவனுடைய விசுவாசத்தை அல்ல அவர்களுடைய விசுவாசத்தை பார்த்து,  உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அதுமாத்திரமல்ல, நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ என்று சொல்லி திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்கினார். அவன் அற்புதங்களைப் பெற்றுக் கொண்டான்.

  இந்தச் சம்பவத்தில் அந்த திமிர்வாதக்காரனுக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் இயேசு கிறிஸ்துவை குறித்து கேள்விப்படவும் இல்லை. எந்த ஒரு விசுவாசமும் கிடையாது. ஆனால், அவனுடைய உறவினர்களின் விசுவாசத்தைக் கண்ட தேவன் அற்புதங்களை செய்தார்.

  நம்முடைய வாழ்க்கையிலும் நம் உறவினர்கள், இரத்த சம்பந்தமானோர்கள், கணவன்-மனைவி, பிள்ளைகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் தேவனுக்கும் பரலோகத்திற்கும் தூரமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய விசுவாசம் அவர்களுக்கு அற்புத சுகத்தினை கொண்டுவரும். எனவே, விசுவாசத்தில் பெலப்படுவோம். உங்கள் உறவினர்களும் அற்புதங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

3.ஊழியக்காரர்களின் விசுவாசம்:-

  சில நேரங்களில்  தனிப்பட்டவர்களின் விசுவாசமும் மற்றவர்களின் விசுவாசமும் குறைவாக இருக்கும். அப்பொழுது, ஊழியக்காரர்களின் விசுவாசத்தினைப் பார்த்து பரலோக தேவன் அற்புதங்களைச் செய்வார்.

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனுஷக்குமாரனாக ஊழியம் செய்த நாட்களில், பெத்தானியா கிராமத்துள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். இந்தச் செய்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வருகின்றது. இதைக் கேட்ட அவர் இந்த வியாதி மரணத்துக்கேதுவான வியாதியாக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கின்றது என்பதனை அறிந்து பொறுமையாக இருந்தார். வியாதி அதிகமாகி அவன் மரித்து போனான்.

  இதன் பின்பு லாசரு இருந்த பெத்தானியா கிராமத்திற்கு வந்தார். அவன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு நாலு நாட்களாக ஆகியிருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய சகோதரியை பார்த்து  உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்று சொன்னார். அவளால் நம்ப முடியவில்லை. கல்லறையில் இருந்த கல்லை எடுத்துப் போடுங்கள் என்று கூறினார். அவளோ ,அடக்கம் பண்ணி நான்கு நாள் ஆயிற்று. இப்பொழுது நாறுமே என்று சொன்னாள். விசுவாசம் இல்லாமல் அவருடைய கிரியையைத் தடுத்தாள். லாசரு மரித்து போயிருந்தான். அவனிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது. அவனுடைய சகோதரிகளும் விசுவாசம் இல்லாமல் இருந்தார்கள். உறவினர்களும் விசுவாசம் இல்லாமல் இருந்தார்கள் தனிப்பட்ட விசுவாசமும் இல்லை. மற்றவர்களின் விசுவாசமும் இல்லை.

  இந்த நேரத்தில் பூமியில் மனுஷக்குமாரனாக ஊழியம் செய்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தனக்கு இருந்த விசுவாசத்தினைக் கொண்டு அற்புதத்தினை செய்தார். மரித்த லாசருவை உயிரோடே எழுப்பினார். ஊழியஞ்செய்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இந்த அற்புதம் நடந்தது. (யோவான். 11ஆம் அதிகாரம்)

   இந்த நாட்களிலும் அற்புதத்தினை பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களின் விசுவாசம் குறைவாக இருக்கலாம். அவர்களுடைய உறவினர்களின் விசுவாசமும் அற்பமாக இருக்கலாம். தேவன் கொடுத்த வார்த்தைகளை விசுவாசித்து, ஊழியக்காரர்கள் காண்பிக்கின்ற விசுவாசத்தைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்.

 இம்மூன்று விசுவாசத்தைக்கொண்டு பரலோக தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அற்புதங்களை செய்கின்றார்.

இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here 

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

அழுத்தம் வேண்டாம்

சீரழிக்கப்பட்டவள்