Posts

Showing posts from June, 2023

எடுத்துக் கொள்ளாதே… கொடுத்தும் விடாதே..

Image
      மற்றவர்களின் பணம், பொருட்கள், நிலங்களை அபகரிக்கின்ற மக்கள் இருக்கும் இந்நாட்களில் தேவனுக்கு சேர வேண்டிய மகிமையும்,  தேவன் தரும் கணத்தையும் திருடுகின்றவர்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆவிக்குரிய காரியங்களிலும் இந்த திருட்டு நடைபெறுகின்றது.        நம்முடைய எதிரியாகிய பிசாசுக்கு திருடன் என்று ஒரு பெயரும் உள்ளது. அவன் இருதயமாகிய நிலத்தில் உள்ள வேதவசனங்களை திருடுகின்றான். அதுமாத்திரமல்ல தேவனுக்கு சேர வேண்டிய மகிமையினையும் திருட முயற்ச்சி செய்கின்றான். அதேபோல் சில மனிதர்களும் தேவனுக்கு சேர வேண்டிய மகிமையினையும் திருடுகின்றார்கள். இது தேவனுடைய பார்வையில் அருவருப்பான ஒன்றாகும். ஏனென்றால் என் மகிமையை வேறொருவனுக்கும் கொடுக்கமாட்டேன் என்று கர்த்தராகிய தேவன் கூறியுள்ளார்.     எனவே, பரலோக தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமையை அவர் ஒருவருக்கே செலுத்த வேண்டும். தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ, பிசாசுக்கோ கொடுக்காதப்படிக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவனுடைய மகிமையை  எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்களுக்கும் கொடுத்த...

உடன்படிக்கையின் உத்தமம்

Image
         எல்க்கானாவின் மனைவியாகிய அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. ஆகையால், சேனைகளின் கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனை பண்ணி விண்ணப்பம் பண்ணினாள்.(1 சாமுவேல் 1:11) கர்த்தர் அவளை நினைத்தருளி  ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். தான் செய்த பொருத்தனைகளின்படியே அந்த குழந்தையை சகல நாளும் கர்த்தருக்கு கொடுத்தாள். உடன்படிக்கையில் உத்தமமாக இருந்ததால், அன்னாளின் உடன்படிக்கையின் உத்தமத்தை பார்த்த சர்வ வல்ல தேவன் மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் கூடுதலாக கொடுத்து ஆசீர்வதித்தார். ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டாள்.         நெடுநாள் ஆசீர்வாதத் தடை இருக்குமென்றால் பொருத்தனை பண்ணி ஜெபிப்பது அற்புதங்களை சீக்கிரத்தில் கொண்டுவரும். ஆசீர்வாதத் தடைகள் மாறும். மேலும், வாயை திறந்து நாம் செய்த உடன்படிக்கையில் உண்மையாக இருக்கும் போது இன்னும் கூடுதலாக ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களைத் தரும். எனவே, உடன்படிக்கையில் உத்தமமாக இருப்போம். ஐந்து மடங்கு ஆசீர்வாதங்களில் சுதந்தரிப்போம். (திரியேக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ..இன்றைய...

உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்

Image
                           ஜுன் மாத வாக்குத்தத்தம்                   உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்    எழுபத்து ஐந்து வயதாகியும் ஆபிரகாமுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. சாராய்க்கு மலடி என்ற பட்டப்பெயரும் கிடைத்திருந்தது. எவ்வளவு நிந்தைகள் எவ்வளவு அவமானங்கள் அவர்கள் சந்தித்திருப்பார்கள். பிள்ளை இல்லாத மலடன் என்று ஆபிரகாமையும்,  பிள்ளை இல்லாத மலடி என்று சாராயையும் மக்கள் நிந்தித்திருப்பார்கள்.  எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சிக்கும் அவர்களால் சென்றிருக்க முடியாது.  ஆபிரகாம் என்று யாராவது உச்சரித்தாலே பிள்ளை இல்லாதவனா? என்று கேட்கின்றவர்கள் அதாவது அந்த நாமத்தின் உச்சரிப்பை கேட்கின்றவர்கள் எதிர் கேள்வி கேட்டிருப்பார்கள். அவ்வளவாய் அவனுடைய பெயர் தூஷிக்கப்பட்டிருக்கும். அந்த ஆபிரகாமை தன்னுடைய சித்தத்திற்கு பரலோக தேவன் அழைக்கும் போதுதான் அவனுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் உன் பெயரை பெருமைப்படுத்துவேன் என்பதாகும். இந...