Posts

Showing posts from April, 2022

அநீதியின் குழந்தை

Image
       ஒரு மனிதனைக் குறித்து பரலோகம் மிகப்பெரியத் திட்டத்தினை வைத்திருக்கும் போது, அதை முறியடிக்க பிசாசு வகைத்தேடி சுற்றித்திரிவான். பல வழிகளில் தந்திரமாக முயற்சி செய்வான். அந்த மனிதனை பயங்கரமான பாவத்தில்   விழச்செய்து திரும்ப எழும்பக் கூடாதபடிக்கு தன்னுடைய கிரியைகளை நடப்பிப்பான். அப்படி என்ன பாவத்தில் விழ செய்வான்? என்னென்ன கிரியைகளை நடப்பிப்பான்? பிசாசின் தந்திரங்கள் என்னென்ன? என்பதனை இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.           தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதைக் குறித்து பரலோகதேவன் மிகப்பெரிய திட்டத்தினை வைத்திருந்தார். அந்த திட்டம் என்ன? என்பதனை 2 சாமுவேல் 7 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இதைக் குறித்து நாத்தான் தீர்க்கதரிசி தாவீதிடம் கூறுகின்றான். இதனை தாவீதும் கேட்டான் கூடவே எதிராளியான பிசாசும் கேட்டான். தாவீதின் வாழ்க்கையில் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தான். தன்னுடைய தந்திரத்தினால் பிறன...

உங்களுடைய அழைப்பு எது?

Image
       ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே மேசியா என்றும், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுப்பவர் என்றும் பிதாவாகிய தேவன் யோவான் ஸ்நானனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தார். அதன்படி, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறும்போது, பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டான். எனவே, இயேசுவே மேசியா என்றும், தேவனுடைய குமாரன் என்றும் சாட்சி கொடுத்து வந்தான். (யோவான் 1: 29 - 34 ) கர்த்தராகிய இயேசுவே மேசியா என்பது அவனுக்கு உறுதியாக வெளிப்படுத்தப்பட்டது.              ஆனால், கடைசி நாட்களில்   யோவான்ஸ்நானகன் காவலில் இருக்கும்போது,   ’வருகின்றவர் நீர்தானோ? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?’ என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்கும்படி தன்னுடைய இரண்டு சீஷர்களை அனுப்பினான். பரலோக தேவனே ஒரு அடையாளத்தைக் காண்பித்து உறுதியாக வெளிப்படுத்தின பின்பும் இவர்தான் தேவனுடைய குமாரனாகிய மேசியாவா அல்லது வேறொருவரா என்று இடறல் அடைந்தான். ஏன் அவன் இடற...

வணங்காக்கழுத்து

Image
                         தேவன் தம்முடைய சுய இரத்தத்தினாலே சபையை சம்பாதித்தார். (அப்போஸ்தலர் 20: 28)   உலகத்தில் பல திருச்சபைகள் உள்ளன. சபைகளில் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. எல்லா சபைகளுக்கும் தலைவர் கிறிஸ்துவே. அவருக்கே எல்லா சபைகளும் கீழ்ப்படிகின்றன.( எபேசியர் 5: 23,24 )   எல்லாப் பிரிவு திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகின்றார்.          அப்படியிருக்க சில சபைகள் பாரம்பரியமாகவும், சில சபைப்பிரிவுகள் மிகக் கடினமாகவும்,   சில சபைகள் இலகுவாகவும் தங்களுடைய விசுவாசிகளை நடத்துகின்றன. நகை அணியக் கூடாது என்றும், மீசை வைக்க கூடாது என்றும், வெள்ளை நிறத்தில்தான் உடைகளை உடுத்த வேண்டும் என்றும்,   கடினமாக நடத்துகின்ற சபைகளும் காணப்படுகின்றன.     ஆவிக்குரிய சபைகளில் ஏன் இந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன? சபைக்கு சபை வித்தியாசமாக இருக்க காரணங்கள் என்னென்ன? நகை அணிவது   பாவமா? யாரெல்லாம் நகை அணியக் கூடாது? தேவன...