Posts

Showing posts from May, 2022

சின்ன தீர்க்கதரிசி?

Image
        கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 7: 15) நல்ல தீர்க்கதரிசி, கள்ள தீர்க்கதரிசி என்று இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் இவ்வுலகில் உள்ளனர். யார் நல்ல தீர்க்கதரிசி? யார் கள்ள தீர்க்கதரிசி? என்பதனை அவர்களுடைய கனிகளைக் கொண்டே மற்றவர்கள் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும். நல்ல கனிகளைக் கொடுப்பவர்கள் நல்ல தீர்க்கதரிசிகளும், கெட்ட கனிகளைக் கொடுப்பவர்கள் கெட்ட (கள்ள) தீர்க்கதரிசிகளாகவும் இருப்பார்கள்.    சில சபைகளில் ஊழியக்காரர்களை சின்ன பிரதர் பெரிய பிரதர் என்று அழைப்பார்கள். அதேப்போல் நல்ல தீர்க்கதரிசிகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பெரிய தீர்க்கதரிசி, மற்றொன்று சின்ன தீர்க்கதரிசி ஆகும். சின்ன தீர்க்கதரிசி என்பவர் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்? யார் பெரிய தீர்க்கதரிசி? என்ற கேள்விகள் உங்களுக்குள் எழும்பலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியில் அதை குறித்துதான் கொஞ்சம் விரிவாக தியானிக்கப் போகின்றோம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர்...

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

Image
       மனுஷனுக்குள்ளேயிருந்துப் புறப்படுகிறவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்.(மாற்கு7:20) எவைகளெல்லாம் மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படும் என்று ஆராய்ந்துப் பார்த்தால் பொல்லாத சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனம், கொலைப்பாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத்தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. (மாற்கு 7: 21-23) பாவங்களில் சின்ன பாவம் பெரிய பாவம் என்ற எந்த ஒரு வித்தியாசமும் கொஞ்சம் கூட கிடையாது. எப்படி கொலைப்பாதகங்கள் மனிதனைத் தீட்டுப்படுத்துமோ அதேபோல், அப்படியே மதிகேடும் மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படி விபச்சாரம் மனிதனைத் தீட்டுப்படுத்துமோ அப்படியே பொருளாசையும் மனிதனைத் தீட்டுப்படுத்தும். ஆதலால், இது சின்ன பாவம் இது பெரிய பாவம் என்று நம்மால் வரையறுக்க முடியாது. மனிதர்களைத்   தீட்டுப்படுத்துகின்ற எல்லாமே பாவம்தான். எனவே, இக்காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.        இந்த கடைசி நாட்களில் பாலி...

வெளிப்பாட்டினால் வரும் பிசாசின் தாக்குதல்

Image
     நம்முடைய எதிர்காலத்தினைக் குறித்துப் பரலோகம் வைத்திருக்கும் திட்டங்களை அறிந்துக்கொள்ளும் ஆவல் தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் இருக்கும். இதற்காக  உலகத்து மக்கள் குறிச்சொல்கின்றவர்களையும், அருள்வாக்கு சொல்கின்றவர்களையும் நாடித்தேடிச் செல்கின்றார்கள். தேவனைப்பற்றி அறிந்த விசுவாசப் பிள்ளைகளோ தீர்க்கதரிசிகளைத் தேடிச் செல்வார்கள். எதிர்காலத்தினைக் குறித்த வெளிப்பாடுகளை தீர்க்கதரிசனமாக கேட்பார்கள். எதையாவது சொல்லிவிடமாட்டார்களா என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள்.    ஆனால், இதற்குப் பின்பு மிகப்பெரிய ஆபத்து ஒன்று உள்ளது. எதிர்கால வெளிப்பாடுகள் கிடைத்த பின்பு அது நிறைவேறக்  கூடாதபடிக்கு பிசாசு மும்முரமாக கிரியைச் செய்வான். சோதனைகளையும், உபத்திரவங்களையும், பாடுகளையும் கொண்டு வருவான். அதில் சிக்கி எதிர்கால வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் இழந்தவர்களும் உண்டு. சிக்காமல் தப்பியவர்களும் உண்டு.     பரிசுத்தவேதத்தில் தாவீதுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட பிரச்சனைகளைப் பிசாசு கொண்டு வந்தான். அதைக்குறித்து இந்த தீர்க்க...