எது விபச்சாரம்? எது வேசித்தனம்?
மனுஷனுக்குள்ளேயிருந்துப்
புறப்படுகிறவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார்.(மாற்கு7:20)
எவைகளெல்லாம் மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படும் என்று ஆராய்ந்துப் பார்த்தால் பொல்லாத
சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனம், கொலைப்பாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத்தனங்கள்,
கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது.
(மாற்கு 7: 21-23) பாவங்களில் சின்ன பாவம் பெரிய பாவம் என்ற எந்த ஒரு வித்தியாசமும்
கொஞ்சம் கூட கிடையாது. எப்படி கொலைப்பாதகங்கள் மனிதனைத் தீட்டுப்படுத்துமோ அதேபோல்,
அப்படியே மதிகேடும் மனிதனைத் தீட்டுப்படுத்தும். எப்படி விபச்சாரம் மனிதனைத் தீட்டுப்படுத்துமோ
அப்படியே பொருளாசையும் மனிதனைத் தீட்டுப்படுத்தும். ஆதலால், இது சின்ன பாவம் இது பெரிய
பாவம் என்று நம்மால் வரையறுக்க முடியாது. மனிதர்களைத் தீட்டுப்படுத்துகின்ற எல்லாமே பாவம்தான். எனவே,
இக்காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இந்த கடைசி நாட்களில் பாலியல் பாவங்களான விபச்சாரங்கள்,
வேசித்தனங்கள் பூமியெங்கும் மிகுந்து காணப்படுகின்றன. விசுவாசி அவிசுவாசி என்ற வித்தியாசமின்றி
அநேகர் இதற்கு அடிமையாக உள்ளனர். இதுதான் விபச்சாரம் இதுதான் வேசித்தனம் என்று அநேகர்
தங்களுக்குத் தெரிந்த அறிவில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்கின்றார்கள். உண்மையிலேயே
எது விபச்சாரம்? எது வேசித்தனம்? என்று அநேகருக்கு தெரியாமல் இருக்கின்றது. இந்த தீர்க்கதரிசன
செய்தியில் பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் எது விபச்சாரம்? எது வேசித்தனம்? என்பதனைக்
குறித்துத் தெளிவாகத் தியானிக்கலாம். இந்த செய்தியை ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த
ஆவியானவர் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். பாலியல் பாவங்களைக் குறித்து அறிந்துக்கொள்வீர்கள்.
1. இரண்டு
சரீரங்கள் இணைவது:-
எது வேசித்தனம்? எது விபச்சாரம்? என்று கேட்டால்
அனைவரும் சொல்வது இதைத்தான். ஒரு ஆண் மற்றும் பெண் தங்கள் சரீரத்தில் இணைவது வேசித்தனம் ஆகும். ஒரு ஆண் தனக்கு உரிமை
இல்லாத பிறனுடைய மனைவியோடு தன் சரீர ஆசைகளை பகிர்ந்துக் கொண்டால் அது விபச்சாரம் ஆகும்.
இந்த பாவத்தில் இரண்டு சரீரங்கள் குறுக்கு வழியில் அநீதியாக தங்கள் பாலியல் இச்சைகளை
தீர்த்துக் கொள்ளும். இந்த பாவங்களையும் பரலோக தேவன் அருவருக்கிறார். இது ஆசீர்வாதத் தடையைக் கொண்டு
வரும். பரலோக பயப்பக்தியையும் இழக்கச் செய்யும்.
2. இச்சையோடு
பார்ப்பது :-
ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்
இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறினார்.
(மத்தேயு 5 : 28) இரண்டு சரீரங்கள் இணைய வேண்டிய அவசியமில்லை. தனக்கு உரிமை இல்லாத
மற்றவர்களை இச்சையாக பார்த்தாலே போதும், ஆவிக்குரிய சரீரங்கள் இணைக்கப்பட்டுவிடும்.
அது புதிய ஏற்பாட்டின்படி விபச்சாரம் ஆகும். எனவே, போக்குச் சொல்ல இடமில்லை. யாரும்
நான் பரிசுத்தவான் என்று மேன்மைப்பாராட்டமுடியாது.
ஏனென்றால், அநேகர் இந்த இச்சையான பாவத்துக்கு இடம் கொடுத்து விபச்சாரத்தில் சிக்கியுள்ளார்கள்.
ஆதலால் தேவனுடைய பிள்ளைகள் இந்த இச்சையான பாவத்திற்கு விலக வேண்டும்.
3. உலக
சிநேகம் :-
விபச்சார,
விபச்சாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா? ஆகையால், உலகத்துக்கு
சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப்
பகைஞனாகிறான் என்று யாக்கோபு 4:4 –ல் வாசிக்கின்றோம். இதை அப்போஸ்தலனாகிய யாக்கோபு
பரிசுத்த ஆவியானவர் துணையோடு எழுதியுள்ளான். இந்த வசனத்தின்படி உலகத்தை நேசிப்பவர்கள்
மற்றும் உலகத்தோடு சிநேகிதமாக இருக்கின்றவர்கள் விபச்சார விபச்சாரிகள் ஆவார்கள். தேவனுக்குப்
பகைஞராகவும் இருக்கின்றார்கள். எனவே, உலகத்தைச் சிநேகிக்காமலும், உலகத்தால் கறைப்படாதப்படிக்கு
பரிசுத்தமாக நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுவே
பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்கோபு
1:27)
4. வாங்குவது
விற்பது:-
மற்ற மூன்றைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். வாங்குவதும்
விற்பதும் வேசித்தனமா என்பதாய் நீங்கள் கேட்கலாம். வெளிப்படுத்தின விசேஷம் 18 ஆம் அதிகாரத்தில்
3 ஆம் வசனத்தில் அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான
மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம் பண்ணினார்கள்;
பூமியின் வர்த்தகர்கள் அவளுடைய செல்வச் செருக்கினால் ஐசுவரியவான்கள் ஆனார்களென்று ஒரு
தூதன் கூறுகின்றான். இந்த வசனத்தில் அவள் என்பது மகா பாபிலோனை குறிக்கின்றது. உலகத்தில் உள்ள இராஜாக்கள் மற்றும் வியாபாரிகள்
பாபிலோனிய நாட்டுடன் வியாபாரம் செய்தார்கள். வாங்குவதும், கொடுப்பதுமாக இருந்தார்கள்.
இதனால் அந்த நாட்டில் உள்ள சகல வித அசுத்த ஆவிகள், பேய்கள் மற்ற நாடுகளுக்குள் சென்றது.
அந்த நாட்டை தீட்டுபடித்தியது. எனவே, இது விபச்சாரம் ஆகும். அதாவது, ஒரு மனிதனுக்குள்
இருக்கும் அசுத்த ஆவிகள் மற்ற மனிதனுக்குள் அல்லது தேசத்திற்குள் செல்வது விபச்சாரமாகும்.
5.
அசுத்த ஆபாச கனவுகள்:-
சிலருக்கு அசுத்த ஆபாசமான கனவுகள் வருவதுண்டு. அக்கனவில் யாரோ ஒருவரோடு தவறாக இருப்பது போல் இருக்கும். நிர்வாணமாகவும் அறைகுறையாகவும் இருப்பார்கள். அவர்களோடு உறவுக் கொள்வது போல் கனவுகள் வரும். இதுவும் விபச்சாரமாகும். இது ஆவிக்குரிய மனிதனில் நடக்கின்ற விபச்சாரமாகும். சரீரத்தில் விபச்சாரம் செய்யும் போது என்னென்ன ஆசீர்வாதத் தடைகள் வருமோ அத்தனை ஆசீர்வாதத் தடைகளும் இதிலே வரும். இதுவும் ஒரு வகையான விபச்சாரமாகும். எனவே, ஆபாசக் கனவுகளைக் குறித்துத் தேவனுடைய பிள்ளைகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபாச கனவுகள் வந்தால் உடனே அதை Cancel பண்ணி ஜெபிக்க வேண்டும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு
மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த
தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
(பிதா, குமாரன், பரிசுத்த
ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப
தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு
ஆசீர்வாதமாக இருக்கும்.)
தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere
தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here
தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல் பெற இதை கிளிக் செய்யுங்கள். Click Here
Comments
Post a Comment