Posts

Showing posts from July, 2023

உயர்வுக்கு பின் தாழ்த்தப்படுவது ஏன்?

Image
            நம்முடைய வேலையில் வாழ்க்கையில் ஒரு உயர்வு கிடைத்த பின்பு தாழ்த்தப்படுவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். வனாந்திரத்தில் கொஞ்ச ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது, சாமுவேல் தீர்க்கதரிசியால் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பிறகு, சவுலின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். அவன் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்தது. எனவே, சவுலுக்கு ஆயுததாரியாக உயர்த்தப்பட்டான். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்தவனுக்கு அரன்மனையில் பெரிய வேலை.  இந்த உயர்வு அவனுக்கு ரொம்ப நாட்களாக நீடிக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்பு, மறுபடியும் சவலை விட்டு திரும்பி போய், வனாந்திரத்தில் இருக்கிற அதே கொஞ்ச ஆடுகளை மேய்க்கச் சென்றான் (1 சாமுவேல் 17: 15). ஏன் இந்த தாழ்வு?    இன்றைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் கூட அநேக தேவனுடைய பிள்ளைகள் வாக்குத்தத்தினை பெற்று, பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, வாழ்க்கையில் அதிசயம் நடந்து உயர்த்தப்படுகின்றார்கள். ஆனால், அது ரொம்ப நாட்கள் நீடித்திருப்பதில்லை. சீக்கிரத்தில் தாழ்த்தப்பட்டு பழைய நிலைக்கே வந்து விடுகின்றார்கள். இப...

புத்திமானாய் நடப்பதினால் வரும் ஆசீர்வாதங்கள்

Image
       மனுஷனுக்குள்ளே இருந்து மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியங்கள் பதிமூன்று(13) உள்ளன.  இதைக் குறித்து மாற்கு ஏழாம் அதிகாரத்தில் 20 முதல் 23 வசனங்கள் வரை வாசிக்கின்றோம்.  இதில் பதிமூன்றாவது  காரியமாக மதிக்கேடு என்ற ஒன்று உள்ளது. இதுவும் மனுஷனை தீட்டுப்படுத்தும்.  எப்படி விபச்சாரம், வேசித்தனம், காமவிகாரம் மனிதனை தீட்டுப்படுத்தி, ஆசீர்வாதங்களை இழக்கச் செய்யுமோ. அதேபோல் மதிக்கேடும் தீட்டுப்படுத்தி, பரலோக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், அற்புதங்களையும் இழக்கச் செய்யும். அறிவுக்கெட்டவன், முட்டாள் என்று கூப்பிடுவதை கேட்டிருப்போம்.  இவைகள் மதிக்கேடு உள்ளவர்களை அழைக்கும் மற்றோர் பெயராகும். அதன்படி  மதிகேடு என்பது அறிவு கெட்டுப் போகுதல்  ஆகும்.  ஒரு மனிதன் அறிவு இல்லாதவனாக  வாழ்வது மதிக்கேடு ஆகும்.             அதே நேரத்தில் ஒரு மனிதன் அறிவு உள்ளவனாகவும், புத்தி உள்ளவனாகவும் இருந்தால் அனேக ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்வான். அறிவில்லாதவனாக இருக்கும் போது, ஆசீர்...

கனத்தைக் கொண்டு வரும் சுபாவம்

Image
       மத்தேயு முதலாம் அதிகாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றை பற்றி கூறுகின்றது. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான் என்று மத்தேயு முதலாம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் வாசிக்கலாம். யாக்கோபுக்கு பன்னிரெண்டு குமாரர்கள் இருந்தார்கள். ஆனாலும், அவர்களில் யூதாவின் பெயர் மட்டுமே இந்த வம்ச வரலாறு அட்டவணையில் எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களின் பெயர்கள் ஏதும் குறிக்கப்படவில்லை.        பன்னிரெண்டு கோத்திரங்களில் யூதாவின் கோத்திரத்தினை மட்டுமே பரலோக தேவன் முன்குறித்தார். அந்த கோத்திரத்தில் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிறந்தார். ஏன் மற்ற கோத்திரங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறக்கவில்லை? யூதா கோத்திரத்தினை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? ஜெபத்துடன் ஆராய்ந்துப் பார்த்தால் சில இரகசியங்கள் நமக்குத் தெரியும்.      லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற நான்காவது குழந்தைதான் யூதா. அவன் பிறந்தவுடன் கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி ...