கனத்தைக் கொண்டு வரும் சுபாவம்




       மத்தேயு முதலாம் அதிகாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றை பற்றி கூறுகின்றது. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான் என்று மத்தேயு முதலாம் அதிகாரம் இரண்டாம் வசனத்தில் வாசிக்கலாம். யாக்கோபுக்கு பன்னிரெண்டு குமாரர்கள் இருந்தார்கள். ஆனாலும், அவர்களில் யூதாவின் பெயர் மட்டுமே இந்த வம்ச வரலாறு அட்டவணையில் எழுதப்பட்டுள்ளது. மற்றவர்களின் பெயர்கள் ஏதும் குறிக்கப்படவில்லை.

       பன்னிரெண்டு கோத்திரங்களில் யூதாவின் கோத்திரத்தினை மட்டுமே பரலோக தேவன் முன்குறித்தார். அந்த கோத்திரத்தில் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிறந்தார். ஏன் மற்ற கோத்திரங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறக்கவில்லை? யூதா கோத்திரத்தினை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? ஜெபத்துடன் ஆராய்ந்துப் பார்த்தால் சில இரகசியங்கள் நமக்குத் தெரியும்.

     லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற நான்காவது குழந்தைதான் யூதா. அவன் பிறந்தவுடன் கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி யூதா என்று பெயரிட்டாள். யூதா பிறக்கும்போதே கர்த்தருடைய நாமம் துதிக்கப்பட்டது. அவன் இந்த பூமியில் வளர்ந்தான். அவன் வளரும்போது சில நல்ல சுபாவங்கள் காணப்பட்டது. அதுவே அவனுடைய பெயர் வம்ச வரலாறு அட்டவணையில் வரக்காரணமாயிருந்தது. அப்படி என்ன சுபாவம் அவனிடத்தில் காணப்பட்டது? அவனிடம் காணப்பட்ட நல்ல சுபாவம் என்ன? இந்த தீர்க்கதரிசன செய்தியில் அதைக் குறித்து விரிவாக ஆராய்ந்து தியானிக்கலாம். நீங்களும் ஜெபித்து ஆராய்ந்துப் பாருங்கள்.

1.சகோதரனைக் காப்பாற்றும் சுபாவம்:

     சொப்பனக்காரனாகிய யோசேப்பு யூதாவின் சகோதரன் ஆவான். தன் சிறு வயதில் நிறைய சொப்பனங்களைக் கண்டு, அதை தன்னுடைய பத்து சகோதரர்களுக்கு அறிவித்தான். அதனால், அவனை எல்லாரும் பகைத்தார்கள். சொப்பனங்களைச் சொல்ல சொல்ல இன்னும் அதிகமாக அவனைப் பகைத்தார்கள். ஆடுகளை மேய்க்கச் சென்ற தன்னுடைய சகோதரர்களை விசாரிப்பதற்காக, தன் தகப்பனாகிய யாக்கோபின் கட்டளையின்படி யோசேப்பு சென்றான். அவன் தூரத்திலே வருகிறதை கண்ட அவனுடைய சகோதரர்கள் அவனைக் கொன்று இந்த குழிக்குள் போட்டு அவனை மிருகம் பட்சித்தது என்று சொல்லுவோம் என்று கூறினார்கள். எப்படியாவது கொன்று விட வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.

      ”அவனைக் கொல்ல வேண்டாம்” என்று சொல்லி மூத்த சகோதரனாகிய ரூபன் அவனை தப்புவித்தான். ஆதலால் உயிரோடு குழிக்குள் தள்ளினார்கள். நாம் நம்முடைய சகோதரனைக் கொண்டு அவன் இரத்தத்தினை மறைப்பதினால் இலாபம் என்ன? என்று சொல்லி அந்தக் குழிக்குள்ளிருந்து வெளியே எடுத்து இஸ்மவேலுக்கு விற்றுப்போட காரணமாக இருந்தவன் யூதா. யோசேப்பு ஜீவனோடு எகிப்துக்கு செல்ல காரணமாக இருந்தான். யோசேப்பின் ஜீவனை தப்புவித்தான்.  (ஆதியாகமம் 37 )

     தேவத்திட்டத்தினைப் பெற்ற தன்னுடைய சகோதரனாகிய யோசேப்பை மற்ற சகோதரர்கள் அழிக்க நினைக்கும்போது அவனை யூதா காப்பாற்றினான். சகோதரனை நேசிக்கும் சுபாவம் அவனிடத்தில் காணப்பட்டது. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாதவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான்? என்று 1 யோவான் 4:20-ல் வாசிக்கலாம். யூதா தன்னுடைய சகோதரனிடத்தில் அன்பு கூறுகின்றவனாக இருந்தான். இந்த நல்ல ஆவிக்குரிய சுபாவம் அவனிடத்தில் காணப்பட்டது. இதுவும் அவனுடைய பெயர் வம்ச வரலாறு அட்டவணையில் எழுதப்பட்ட ஒருக்காரணம் ஆகும்.  இதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவன் கோத்திரத்தில் பிறந்தார்.

       நாமும் கூட சொந்த சகோதரர்களையும், ஆவிக்குரிய சகோதரர்களையும் நேசித்து அன்பு கூறுகின்றவர்களாக இருப்போம். அப்பொழுது நம்முடைய பெயரும் பரலோக  புஸ்தகத்தில் எழுதப்படும். நம்முடைய சந்ததியிலும் பெரிய தீர்க்கதரிசி பிறப்பான். ஆதலால் கண்ட சகோதரனிடத்தில் அன்புக்கூர்ந்து காணக்கூடாத தேவனின் அன்பை பெற்றுக் கொள்வோம்.    

2.சந்ததியைக் குறித்த கரிசனை:

  அந்த நாட்களில் யூதா சூவா எனும் பேருள்ள கானானியனுடைய குமாரத்தியை திருமணம் செய்தான். அவள் ஏர், ஓனான், சேலா என்ற மூன்று குமாரர்களை பெற்றாள். சந்ததிப் பெருக வேண்டும் என்பதற்காக ஏற்றக் காலத்தில் தன்னுடைய மூத்த மகனுக்கு தாமார் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தான். ஆனால், ஏர் சந்ததி பெருக்கத்தினை தடை செய்து கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவனாக இருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார். யூதா சந்ததிப் பெருக்கத்தினை குறித்த தரிசனம் உடையவனாக இருந்ததினால்,  இக்காரியங்களை அப்படியே விடாமல் தாமாருக்கு இரண்டாவது குமாரனையும் கொடுத்து, தமையனுடைய சந்ததியை உண்டாக்கு என்று கூறினான். அதாவது இறந்துப் போன தன்னுடைய மூத்த மகனுக்கு சந்ததி உண்டாக வேண்டும் என்று பிரயாசப்பட்டான். ஆனால், ஓனானும் பொல்லாதவனாக இருந்து, சந்ததி பெருக்கத்தினை தடை செய்து வித்தை தரையில் விழ விட்டு கெடுத்ததினால், தேவன் அவனை அடித்தார். இரண்டு குமாரர்கள் இறந்து விட்டார்கள். இப்பொழுது இருப்பது சேலா மட்டுமே அவனும் இறந்துவிட்டால் வேறு குமாரர் இல்லை என்று அஞ்சினான். எனவே, தாமாருக்கு அவனைக் கொடுக்கவில்லை. (ஆதியாகமம் 38 )

         இந்த காரியங்களை தியானிக்கும் போது யூதா சந்ததியைக் குறித்தும் தன்னுடைய பிள்ளைகளைக் குறித்தும் மிகவும் கரிசனையுள்ளவனாகவும், தரிசனமுள்ளவனாகவும் இருந்தான் என்பதனை புரிந்துக்கொள்ள முடிகின்றது. தன் சந்ததி பாதுக்காக்கப்பட வேண்டும் என்று பிரயாசப்பட்டான். இதனால்தான் அவனுடைய சந்ததி ஆசீர்வதிக்கப்பட்டது . அதில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிறந்தார்.

       பூமியில் குடும்ப வாழ்க்கையையும், இல்லற வாழ்க்கையையும், திருமண வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுத்ததன் நோக்கமே பக்தியுள்ள சந்ததியை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். சந்ததி பெருக்கம் பரலோக தேவனுடைய விருப்பமாகும். எனவே, தன்னுடைய பிள்ளைகள் தன்னுடைய சந்ததியைக் குறித்து கரிசனையுள்ளவர்களாகவும், தரிசனமுள்ளவராகவும் இருப்பவர்களை பரலோக தேவன் ஆசீர்வதிப்பார். யூதாவின் பெயரை வம்ச வரலாறு அட்டவணையில் எழுதி கனப்படுத்தியது போல் உங்களையும் கனப்படுத்துவார்.

3.திரும்ப திரும்ப பாவம் செய்யவில்லை:

    நீ உன் தகப்பன் வீட்டில் விதவைப் பெண்ணாய் தங்கியிரு; என் மூன்றாவது மகன் சேலா பெரியவனான பின்பு உனக்கு தருகின்றேன் என்று தன் மருமகளாகிய தாமாரினிடத்தில் சொல்லியிருந்தான். அவளும் அதை நம்பி கைம்பெண்ணாய் தன் தகப்பன் வீட்டில் தங்கியிருந்தாள். நாட்கள் உருண்டோடின. சேலா பெரியவனானான்; ஆனாலும், தாமாரை அவனோடு திருமணம் செய்து வைக்கவில்லை. இதைக் கண்ட அவள் தன்னுடைய கைம்பெண்ணுக்குரிய வஸ்திரங்களை களைந்துப் போட்டு வேசியின் ஆடையை தரித்து, தன் முகத்தை மறைத்து, திம்னாவுக்குப் போகிற நீரூற்றுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

     யூதா அவளைக் கண்டு, தன் முகத்தை மூடி இருந்தபடியால் வேசி என்று நினைத்து, அவளோடு சேர்ந்தான். மருமகள் தாமார் என்பது அவனுக்கு தெரியாது. வேசி என்று நினைத்து ஒரே ஒருமுறை மட்டுமே சேர்ந்தான். அதனால் கர்ப்பவதியானாள். பின்னொரு நாளில்  அந்த கர்ப்பத்திற்கு காரணம் தான்தான் என்பதனை அறிந்த  அவன் பின்பு அவளோடு சேரவில்லை என்று வேதம் கூறுகின்றது. அதாவது தன் மருமகள் என்று தெரியாமல் அவளோடு பாவம் செய்துவிட்டான். ஆனால், தெரிந்தப்பின்பு அவன் பாவம் செய்யவில்லை. அதனால்தான் வம்ச வரலாறு அட்டவனையில் அவனுடைய பெயர் எழுதப்பட்டுள்ளது.

      இந்த பாவ உலகத்தில் ஏதோ தெரிந்தோ தெரியாமலோ பாவத்திற்குள் விழுந்துவிடலாம். விழுந்தப் பின்பு மறுபடியும் மனதளவிலும் உடலளவிலும் பாவம் செய்யக்கூடாது. அப்படி பாவம் செய்யாமல் பரிசுத்தமாக இருப்பவர்களைதான் பரலோக தேவன் பயன்படுத்துவார்.

     சகோதரனைக் காப்பாற்றும் சுபாவம், சந்ததியைக் குறித்த கரிசனை, திரும்பத் திரும்ப பாவம் செய்யாதிருப்பது போன்ற மூன்று முக்கிய சுபாவங்கள் யூதாவிடம் காணப்பட்டன. எனவே, தேவன் அவனை கனப்படுத்தி அவன் சந்ததியைப் பெருகச் செய்தார். அவன் வம்சத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார். இந்த மூன்று சுபாவங்கள் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமானால், நிச்சயமாக பரலோக தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது.  இதில் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கலாம். இதை Play Store-ல்  Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும்.

Click Here 

இதுவரை தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசன செய்திகளை வாசிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். Click Here 

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். ClickHere 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..