பாவம் ஏன்?
எகிப்து என்பது பாவமாகும். தேவனுடைய பிள்ளைகளின் நன்மைக்காகவும் தன்னுடைய திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் சில நேரங்களில் எகிப்துக்கு அனுப்புவார். அது ஏன்? எப்படி? என்பதனைக் குறித்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் தியானிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் கொஞ்ச ஜனங்களாக கானானில் இருந்தார்கள். ஒரு யுத்தம் உண்டானால் மொத்த முழு சந்ததியும் அழிந்துவிடும். ஆகையால் அவர்கள் பலுகிப் பெருக வேண்டும் என்று சர்வவல்லதேவன் விரும்பினார். ஆனால், அவர்களால் கானானில் பெருக முடியாது. எனவே, எகிப்து தேசத்துக்கு அனுப்பினார். எகிப்து என்பது விக்கிரகங்களினால் நிறைந்து, விக்கிரக ஆராதனை செய்கின்ற ஒரு இடமாகும். மனைவி அழகாக இருந்தால் போதும், அவளுடைய கணவனை கொன்றுவிட்டு, அவளை தனக்கு சொந்தமாக எடுத்துக் கொள்கின்ற மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள். தன் வீட்டு வேலைக்காரன் மீது கண் போட்டு அவனோடு சயனிக்கலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்த பெண்களும் அங்கு உண்டு....