Posts

மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-2021

Image
  கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…            தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்   சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்   மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. அதன்படி கடந்த 2021-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும்   என்றும்   2021- ம் ஆண்டு ஜனவரி   மூன்றாம் தேதி   அறிவிக்கப்பட்டிருந்தது. (முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய்)      சுமார் ஆறாயிரத்திற்கும் (6,000) மேற்பட்டோர்   முன்பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டார்கள். எழுதிய நோட் அல்லது பேப்பர் எங்களுக்கு வந்...

புதுவருட வாக்குத்தத்த தீர்க்கதரிசன செய்தி-2023

Image
           ஏதோ கடமைக்காக ஒவ்வொரு வருடமும் வாக்குத்தத்தங்களை எடுத்து அறிவிப்பதில்லை. மாறாக உண்மையிலே பரலோக தேவன் என்ன செய்யப் போகின்றார் என்பதைத்தான் வாக்குத்தத்தமாக மற்றவர்களுக்கு சொல்கின்றோம். பரலோக தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தத்தினை இப்படித்தான் என்று யாரும் சொல்ல முடியாது. இதுதான் வேண்டும் என்று யாரும் கட்டளையிடவும் முடியாது. ஒவ்வொரு வருடமும் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளாரோ, தம்முடைய புஸ்தகத்தில் என்ன எழுதியுள்ளாரோ அதைதான் வாக்குத்தத்தமாக கொடுப்பார். எதை கொடுத்துள்ளாரோ அதைதான் வாழ்க்கையில் செய்வார்.    இந்த 2023 ஆம் வருடமும் சங்கீதம் 27 ம் அதிகாரம்  ஆறாம் வசனத்தில் இருந்து  என் தலை என்னை சுற்றிலும் இருக்கின்ற நம் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும் என்று வாக்கு கொடுத்துள்ளார்.   கடந்த வருடமும் இதைத்தான் எனக்கும் என்னோடு கூட இந்த ஊழியத்தில் இணைந்து இருக்கின்ற சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கொடுத்தார். அதன்படி சத்துருக்களுக்கு முன்பாக என் தலையை உயர்த்தினார். அதை ...

தேவனுடைய விருப்பம் எது?

Image
           ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேச வழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியில் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களை சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டார்கள். இந்த வசனத்தை பரிசுத்த வேதத்தில் யாத்திராகமம் புத்தகம் 13 ஆம் அதிகாரம் 17 மற்றும் 18 ஆம் வசனங்களில் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலையாகி கானானுக்கு நேராகச் சென்றார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசே அவர்களை வழிநடத்தினான். அப்பொழுதுதான் பரலோக தேவன்   ஜனங்கள் யுத்தத்தினை கண்டால் மனமடிந்து விடுவார்கள் என்று சொல்லி அவர்களை வேறு வழியாக நடத்தினார். அதைத்தான் இந்த வசனத்தில் வாசித்தோம். இதை கொஞ்சம் ஆழமாக தியானித்தால் பல ஆவிக்குரிய இரகசியங்கள் வெளிப்படும். தீர்க்கதரிசன வார்த்தைகளும் நமக்கு நேராக கடந்து வரும். இந்தச் செய்தியில் இந்த வசனங்களை பல   வழிகளில், பல தலைப்புகளில்   ...

एक महीने में एक चमत्कार

Image
                      सारी स्तुति , सम्मान , महिमा और प्रशंसा स्वर्गीय पिता परमेश्वर , प्रभु यीशु मसीह , और परमेश्वर पवित्र आत्मा के लिए होने पाए। एक महीने में एक चमत्कार की यह योजना स्वर्गीय परमेश्वर द्वारा दी गई योजना है। इसलिए , प्रभु यीशु मसीह उन लोगों के लिए चमत्कार करेंगे जो इन प्रार्थना निवेदनों के लिए प्रार्थना करते हैं। वह सच्चा है। कल , आज और हमेशा के लिए नहीं बदलता। इसका उद्देश्य यह है कि आप स्वयं प्रार्थना करें और स्वयं परमेश्वर से चमत्कार प्राप्त करें। ये प्रार्थना निवेदन 1 तीमुथियुस 2:1-4 पर आधारित हैं। ये सभी भविष्यसूचक प्रार्थना निवेदन हैं। अपनी निजी प्रार्थना में उत्सुकता के साथ प्रतिदिन एक घंटा प्रार्थना करें। सप्ताह में एक बार या यदि संभव हो तो महीने में एक बार उपवास रहकर प्रार्थना करें।   प्रार्थना निवेदन   1. भारत के लोगों और राष्ट्रपति , प्रधान मंत्री , मंत्रियों , ...