இரத்தத்தின் வல்லமை


        

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மிகவும் விலையேறப்பெற்றது என்று பரிசுத்த வேதத்தில் 1 பேதுரு 1:19 -ல் வாசித்திருப்போம். அந்த இரத்தம் உலக மக்களின் பாவத்திற்காக சிந்தப்பட வேண்டும் என்று முழு பரலோகமும் காத்துக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், பாவத்திலே ஊறித் திளைத்தவனாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசிக்கும்போதும், அதை தியானிக்கும்போதும் பரிசுத்தவானாக மாற்றப்படுவான். அவனுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் கூட மரிப்பதற்கு முன்பு, தன்னுடைய சீஷர்களிடத்தில் உங்களுக்காகச் சிந்தப்படுகின்ற இரத்தத்தையும், பிட்கப்படுகின்ற  சரீரத்தையும், அதன் சிலுவை பாடுகளையும், நான் திரும்ப வரும்வரை நினைவுக்கூறுங்கள் என்று இராப்போஜனத்தை அடையாளமாக கொடுத்துவிட்டு சென்றார். அதாவது, நமக்காக சிந்தின இரத்தத்தையும், சிலுவையில் பட்ட பாடுகளையும், ஒவ்வொரு நாளும் நினைவுக்கூர்ந்தாலே போதும், நித்திய ஜீவனை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அந்தளவுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வல்லமை உள்ளதாக இருக்கின்றது.

     இந்த தீர்க்கதரிசன செய்தியில்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமைகளில் சிலவற்றையும், அவற்றின் ஆழ்ந்த இரகசியங்களையும் கொஞ்சம் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் கருத்தாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமைகளை உங்களுக்கு கற்றுத் தந்து, வேதத்தின் ஆழங்களுக்குள் நடத்துவார். இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 

1.நியாயப்பிரமாணத்தின் வல்லமைகளை உடைத்தெறியும் : 

    தேவனுடைய தாசனாகிய மோசே மிகப்பெரிய தீர்க்கதரிசி ஆவான். பூமியிலுள்ள எல்லா மனிதர்களிலும் மிகவும் சாந்தகுணம் உள்ளவன். நியாயப்பிரமாணம் அவன் மூலமாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணம் கொஞ்சம் கூட அழிந்து போகாது. நியாயப்பிரமாணத்தில் காணப்படும் சிறிய உறுப்பு கூட அழிந்து போகாது. அதை ஒருவனாலும் அழித்துவிட முடியாது (மத்தேயு 5 :17).

     ஒரு மனிதன் பாவம் செய்தால் நியாயப்பிரமாணத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஒருவன் விபச்சாரம் செய்தால் நியாயப்பிரமாணத்தின்படி கொலை செய்யப்பட வேண்டும். இது நியாயப்பிரமாண சட்டமாகும். அப்படிப்பட்ட நியாயப்பிரமாண சட்டங்களையும், அதின் வார்த்தைகளையும், அந்த வார்த்தைகளில் உள்ள சாபங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உடைத்தெறியும் வல்லமை உள்ளது.

    மோசே தீர்க்கதரிசி மூலமாக கொடுக்கப்பட்ட பரலோக சட்டத்தின் வார்த்தையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு முன்பாக நிற்க முடியாதென்றால், வேறு எந்த ஊழியக்காரனின் வார்த்தைகளும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும், அவர்களின் சாபங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு முன்பாக நிற்க முடியாது. இதுவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமைகளில் ஒன்றாகும்.

    இந்த கடைசி நாட்களில் சூனிய ஜெபங்கள் மிக அதிகமாக ஏறெடுக்கப்படுவதை பார்க்க முடிகின்றது. அதாவது பரலோக தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவ ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் சக மனிதர்களையும், சக ஊழியர்களையும், சகோதரர்களையும், பரலோக தேவனுடைய சித்தத்திற்கு மாறாக சபித்து ஜெபிப்பதுதான் சூனிய ஜெபமாகும்.. சிலநேரங்களில் இது சில பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கொண்டு வரும். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்று வரும்போது, அந்த சூனிய ஜெபமும், அதனால் வரும் சூன்யக்கட்டுகளும் அழிக்கப்பட்டுவிடும். எந்தவிதமான பாதிப்புகளும் வராது. கொஞ்சம் கூட வராது.

 ஆதலால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளாக இருக்கும் தேவனுடைய பிள்ளைகளே! நியாயப்பிரமாணத்தின் சாபங்களுக்கும் தீர்க்கதரிசிகள், ஊழியக்காரர்கள் மற்றும் மனிதர்கள் வாயிலிருந்து வரும் சாப வார்த்தைகளுக்கும்  கொஞ்சம் கூட பயப்படவேண்டாம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்களைப் பாதுகாக்கும்.

2. பிசாசின் தீர்மானங்களை  உடைத்தெறியும் : 

    சாத்தானைக் குறித்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறும்போது, அவனுக்கு ஒரு இராஜ்ஜியம் இருப்பதாக கூறினார்.( மத்தேயு 12:26). இராஜ்ஜியம் என்றால் ஒரு தலைவன் இருப்பான். அவனோடு கூட ஆளுகை செய்யும் நிறைய தலைவர்கள் இருப்பார்கள். அதிகாரிகளும் இருப்பார்கள். ஆளுகைகள், சங்கங்கள், கமிட்டிகள், தீர்மானங்கள், சட்டங்கள் என இருக்கும். பிசாசின் இராஜ்ஜியத்தின் தலைவன் லூசிபர் ஆவான். அவன்தான் பிசாசு என்று அழைக்கப்படுகின்றான். அவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், அவனுடைய இராஜ்ஜியம் நிலைநிற்பதற்காகவும் பாடுப்பட்ட நிறைய அசுத்தவான்கள் அவனோடு கூட ஆளுகை செய்வார்கள். தீர்மானத்தினை இயற்றுவார்கள்.

        பிசாசின் சட்டத்திற்குட்பட்டு ஒரு ஊழியக்காரன்  அல்லது தேவனுடைய பிள்ளைகள் பாவம் செய்யும்போது, முதலில் பிசாசின் இராஜ்ஜியத்தில் உள்ள சங்கத்திற்கு அந்த வழக்கு வருகின்றது. அங்கு செய்த பாவங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றது. என்னென்ன தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு விரோதமாக தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட அந்த தீர்மானங்கள் சாத்தானுடைய இராஜ்ஜியத்திலுள்ள மூப்பர்களுக்கும், ஆளுகை செய்கின்றவர்களுக்கும் அனுப்பப்படுகின்றது. அங்கிருந்து பிதாவாகிய தேவனுடைய சமூகத்திற்கு செல்கின்றது.

    இரவும் பகலும்  நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிற பிசாசானவன், தேவனுக்குமுன்பாக தீர்மானங்களை படித்துக் காண்பித்து குற்றம் சாட்டி, அவர்கள் மேல் அதிகாரத்தினை பெறுவான். பின்பு, தீர்மானத்தின்படி அவர்களை ஆளுகை செய்து அடிமைப்படுத்துவான். இப்படிதான் பிசாசு மனிதர்கள் மேலும் தேவனுடைய பிள்ளைகள் மேலும்  அதிகாரம் எடுக்கின்றான்.

 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தையும்,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தையும் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான். இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பிசாசின் இராஜ்ஜியத்திலுள்ள சங்கங்கள் மற்றும் கமிட்டிகளினால் இயற்றப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும், எந்த ஒரு சட்டத்தையும் கேன்சல் பண்ண முடியும். ஏன்? எதற்கு? எப்படி? என்று பிசாசினால்  கேட்க முடியாது. தீர்மானத்தைப் படித்து காண்பித்து குற்றம் சாட்டுவதற்காக பிதாவின் சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியாது. இதுவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமைகளில் ஒன்றாகும்.

         எனவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள், பிசாசினால் வரும் குற்றச்சாட்டுக்குப் பயப்படாமல் எதிர்த்து நில்லுங்கள். குற்றம் சாட்டும் பிசாசினை அவனுடைய எல்லைகளிலே தோற்கடியுங்கள்.

 

3. பழைய உலகத்தின் பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் :

     நாம் இப்பொழுது ஒரு உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். அப்போஸ்தலனாகிய யோவான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் குறித்த தரிசனத்தை பார்க்கின்றான்.  இதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துதல் 21 ம் அதிகாரத்தில் எழுதி வைத்துள்ளார்.  புதிய வானம் புதிய பூமி என்று ஒன்று உண்டென்றால்,  பழைய வானம் பழைய பூமி என்று ஒன்று இருந்திருக்க வேண்டும். புதிய வானம் புதிய பூமியில் இரட்சிக்கப்படுகின்ற மக்கள் இருப்பார்கள் என்றால், பழைய வானம் பழைய பூமியிலும் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த உலகத்தில் இருந்து இரட்சிக்கப்பட்ட மக்கள்தான் புதிய வானம் புதிய பூமிக்கு செல்கின்றார்களென்றால் பழைய வானம் பழைய  பூமியில் வாழ்ந்த மக்கள்தான் இந்த உலகத்திற்கு வந்திருக்க வேண்டும். இது ஆவிக்குரிய மிகப்பெரிய இரகசியமாகும்.

      இந்த பூமியில் நாம் வாழும்போது செய்த பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நீக்கி சுத்திகரிக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பழைய வானம் பழைய பூமியில் வாழும்போது செய்த பாவத்தையும் கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நீக்கி சுத்திகரிக்கும். ”என்னடா இது புதுக்கதையாக இருக்கு இந்த வானத்தையும் பூமியையும் இதில் உள்ள வாழ்க்கையும்  நம்பமுடியவில்லை… இதுலே வேறே பழைய வானமா? பழைய பூமியா?” என்று வியப்பாக கேட்கலாம். இதைக் குறித்து  கொஞ்சம் விரிவாக இதில் தியானிக்கலாம்.

    ஏழு வானங்கள் உண்டு என்பது யூதர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. பரிசுத்த வேதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டேன் என்று கூறுகின்றான். மூன்றாம் வானத்தில்தான் மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று பார்க்கின்றோம். (2கொரிந்தியர் 12:3) மூன்றாம் வானம் தேவனுடைய சிங்காசனம் ஆகும். இந்த மூன்றாம் வானத்திலிருந்துதான்  இரண்டாம் வானத்தையும் பூமியையும் உன்னதத்தில் வீற்றிருக்கும் தேவன் உருவாக்கினார்.  இதை காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபுக்கு ஒப்புக்கொடுத்தார். அங்கும் தேவனுடைய தோட்டமாகிய ஏதேன் இருந்தது. அங்குதான் அவன் இருந்தான். (எசேக்கியல் 28:14)

       உன்னதமானவரின் நாமத்தைத் துதிக்கின்ற அநேக மக்கள் அந்த பூமியில் தேவத்தூதர்களைப்போல் வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை அவன் ஆளுகை செய்து கொண்டிருந்தான். அவர்களை துதிக்க வைப்பதும், ஆராதனை செய்ய வைப்பதும் அவனுடைய வேலை. அவனைத்தான் லூசிபர் என்றும், பிசாசு என்றும் இந்த பூமியில் அழைக்கின்றோம். ஆனால், பழைய பூமியில் ஆராதனை வீரன் என்று அவன் அழைக்கப்பட்டான்.

  அவன் ஒரு வானம் ஒரு பூமியை மட்டும் ஆளுகை செய்துக் கொண்டிருந்தான். ஆனால் உன்னதமானவரோ பல வானங்களையும் பல பூமிகளையும், பல தூதர்களையும் ஆளுகை செய்துக்கொண்டிருந்தார். பல வானங்கள் பல பூமிகள் வந்து அவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தின. அவர் நட்சத்திரங்களின் இலக்கங்களை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கின்றவராக இருந்தார்.(சங்கீதம்147:4) இதைப் பார்த்த லூசிபருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நானும் சளைத்தவன் அல்ல. பல வானங்களின் கனத்திற்கும் மகிமைக்கும் நானும் பாத்திரவான்தான்  என்று மனதில் யோசித்தான்.  நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னான்.(ஏசாயா  14:13,14)

       தனக்காக ஒரு கூட்ட தூதர்களைச் சேர்த்துக்கொண்டு உன்னதமானவர் வீற்றிருக்கிற வானத்திற்கு ஏறினான். உன்னதமானவரை சிங்காசனத்தை விட்டுத் தள்ளி, அவன் அந்த சிங்காசனத்தில் உட்கார வேண்டும் என்பதும், அல்லது அவருக்கு அருகில் தனக்கொரு சிங்காசனத்தை வைத்து எல்லா வானங்களின் கனத்தையும், மகிமையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவனுடைய திட்டம் ஆகும்.

   வானத்திலே ஒரு பெரிய யுத்தமுண்டாயிற்று. மிகாவேலும் அவனை சேர்ந்த தூதர்களும் அவனோடு யுத்தம் பண்ணினார்கள். லூசிபரும் அவனை சேர்ந்த தூதர்களால் யுத்தம்பண்ணியும் வெற்றி பெற முடியவில்லை. கடைசியில் லூசிபர் வெட்டப்பட்டு, வானத்திலிருந்து பூமியில் விழுந்தான். அவனோடு கூட சென்ற ஒரு கூட்ட தூதர்களும் கீழே விழுந்தார்கள். உன்னதத்தில் வீற்றிருக்கிறவர் ஜெயமெடுத்தார். அல்லேலுயா .(ஏசாயா  14:12)

  பூமியில் விழுந்த லூசிபர் கடுங்கோபம் கொண்டான். அன்றைக்கு பூமியில் வாழ்ந்த மக்கள் மீது அவனுடைய கோபம் இருந்தது. அவர்களையெல்லாம் வஞ்சித்து, பரலோக தேவனுக்கு விரோதமாக கலகம் செய்யத் தூண்டி பாவம் செய்ய வைத்துவிட்டான். ஒரு கூட்ட மக்கள் பாவம் செய்தார்கள். பூமியில் பாவம் பெருகியது. இருள் சூழ்ந்தது. எனவே, தேவன் அந்த பூமியைத் தண்ணீரினால் அழித்தார். அதனால்தான் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் இரண்டாம் வசனத்தின் படி பூமியானது வெறுமையும் ஒழுங்கின்மையாகவும் இருந்தது. பின்புதான் தன்னுடைய வார்த்தைகளினால் முதலாம் வானத்தையும் பூமியையும் உருவாக்கி ஆதாமுக்கு கொடுத்தார்.

     இரண்டாம் வானம் பூமியில், லூசிபரின் ஆளுகைக்குள் இருந்து, அவனால் வஞ்சிக்கப்பட்டு பாவம் செய்த மக்களை மறுபடியும் முதலாம் வானம் பூமியில் பிறக்கச் செய்து, தன்னுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய செய்து பரிசுத்தமாக்க வேண்டும் என்று தேவன் சித்தம் கொண்டார். அவருக்காக வைராக்கியமாக இருந்த ஒரு கூட்ட மக்களை உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் முன்குறித்தார். (எபேசியர் 1:4, 1கொரிந்தியர் 2:7) அவர்களை இந்த பூமியில் பிறக்கச் செய்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து பரிச்சுத்தமாக்குகின்றார். அவருடைய மகிமைக்கு ஒப்பாக மாற்றுகின்றார்.

  பழைய உலகத்தில் செய்த பாவமும் பாவமே ஆகும். அந்த பாவங்களும் இந்த பூமியில் தொடர்ந்து வரும். அது புதிய வானம் புதிய பூமிக்கு செல்ல தடையாக இருக்கும். அந்த பாவங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கழுவி சுத்திகரிக்கும். இதுவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமைகளில் ஒன்றாகும்.

     முந்தின உலகத்தில் செய்த பாவங்களைக்கூட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நீக்கி சுத்திகரிக்குமென்றால் இந்த உலகத்தின் பாவங்களையும், முன்னோர்கள் செய்த பாவங்களையும், பத்து தலைமுறைக்கு முன்பாக செய்த பாவங்களையும், முற்பிதாக்கள் செய்த பாவங்களையும், முந்தின காலங்களில் செய்த பாவங்களையும், முந்தின நாட்களில் செய்த பாவங்களையும், வாலிப வயதில் செய்த பாவங்களையும், அறியாத வயதில் செய்த பாவங்களையும் எவ்வளவாய் நீக்கி சுத்திகரிக்கும்.

    எனவே, தேவனுடைய பிள்ளைகள் முன்னோர்கள் செய்த பாவங்களைக் குறித்தும், முற்பிதாக்கள் செய்த பாவங்களைக் குறித்தும், தாய் தகப்பன் செய்த பாவங்களைக் குறித்தும், வாலிப வயதில் செய்த பாவங்களைக் குறித்தும், அறியாத வயதில் செய்த பாவங்களை குறித்தும் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம்.    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே .    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  இரத்தத்தினாலே அறிக்கையிடுங்கள் உங்கள் பாவங்கள் நீங்கி சுத்திகரிக்கப்படுவது உறுதி. உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.ஆமென் (ஏசாயா 1:18)

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

  1. விளக்கமான அருமையான செய்தி,அனைவரும் படித்து பயன்படுத்திக்கொள்ள ஜெபிக்கிறேன்.

    ReplyDelete
  2. இந்த விளக்கம் எல்லாருடைய வாழ்கையை மாத்தும். உயிருள்ள வார்த்தைகள்

    ReplyDelete
  3. சில ஊழியர்கள் மட்டுமே அறிந்து கொள்ள கூடிய இரகசியத்தை வெளிப்படுத்தினீர்கள் நன்றி!

    ReplyDelete
  4. Blood of Jesus cleanse us from all the sin
    Amen

    ReplyDelete
  5. Very💯 useful for me and my spiritual growth and development, today I know how Best the Blood of Jesus Christ as well as how powerful. Glory to God. This is very great secret of Jesus Christ's Blood

    ReplyDelete

Post a Comment

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..