Posts

Showing posts from January, 2023

தாம்பத்திய வாழ்க்கையில் பிசாசின் தந்திரம்

Image
      உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு என்று நீதிமொழிகள் 5ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இதை ஞானத்தின் வரத்தைப் பெற்ற சாலொமோன் பரிசுத்த ஆவியானவர் துணையுடன் எழுதியுள்ளான். அதேபோல் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலும் புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்கு செய்யக்கடவள் என்று 1 கொரிந்தியர் 7 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் கூறியுள்ளான். அதாவது கணவன் மனைவிக்குள்ளான தாம்பத்ய உறவை கடமை என்று கூறியுள்ளான்.    பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைய கடமைகள் உள்ளன. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். கடமை என்றால் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம் என்று வாய்ப்புகள் கொடுக்கப்படாது. அவைகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் பூரண மனிதனாக இருப்பான். அதேப்போல் கணவன்-மனைவிக்குள்ளான தாம்பத்ய வாழ்க்கை என்பது அத்தியாவசிய கடமையாகும். அதாவது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவர்களுக்கு இது அத்தியாவசியமான ஒன்றாகும். ஸ்திரீயை தொடாமல...

ஆவிக்குரிய வஞ்சகம்

Image
                              ஆவிக்குரியக் காரியங்களை காண்பித்து ஆவிக்குரியவர்களை வஞ்சித்து பாவத்திற்கு நேராக நடத்துவது பிசாசின் மிகப்பெரிய தந்திரமாகும்.   இந்த தந்திரத்தினை யாராலும், எவராலும் எளிதாக கண்டுப்பிடிக்க முடியாது. ஆதலால், அநேக ஆவிக்குரியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அதை விட்டு வெளியே வரக்கூடாதபடிக்கும் பிசாசினால் கட்டப்பட்டுள்ளார்கள். இந்த தீர்க்கதரிசன செய்தியில் இப்படிப்பட்டஆவிக்குரிய வஞ்சகத்தை குறித்து விரிவாக பார்க்கலாம். ஜெபத்துடன் கருத்தாக தொடர்ச்சியாக வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இடைப்படுவாராக ஆமென்.      கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனுஷக்குமாரனாக வாழ்ந்த நாட்களில் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டுப் போகப்பட்டார். அந்த சோதனை நேரத்தில் மூன்று விதமான சோதனைகளைப் பிசாசு கொண்டு வந்தான். அதில் ஒன்றுதான் நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக...

பிசாசின் சதித்திட்டம்

Image
        பெலிஸ்தியர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிம்சோனை பிறக்கச் செய்த தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவன் வளர்ந்து பெரியவனானான். கர்த்தருடைய ஆவியானவர் ஒரு மனிதனை ஏவுவது மிகப்பெரிய சிலாக்கியம். அவன் தான் பாளையத்தில் இருக்கையில் அவனை   அவர் ஏவத்துவங்கினார். அவன் பெலிஸ்தியர்களின் தேசமான திம்னாத்துக்கு சென்றான். அங்கே அவர்களோடு யுத்தம் செய்து பரலோக தேவனுடைய சித்தத்தினை நிறைவேற்ற வேண்டியவன் பெலிஸ்தியர்களின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னுடைய வீட்டிற்கே திரும்ப வந்து விட்டான். தன் பெற்றோர்களிடம் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், அவள் என் கண்ணுக்கு பிரியமானவள் என்றும் கூறுகின்றான்.          கர்த்தருடைய ஆவியானவர் தன்னுடைய திட்டத்திற்காக அனுப்பி இருக்க அவன் திரும்ப வந்ததற்கான காரணம் என்ன? அப்படித் திரும்ப வரும்போது ஆவியானவர் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இதற்குள்ளாக இருக்கும் பிசாசின் தந்திரங்கள் என்னென்ன? கொஞ்சம் தியானிக்கலாம். இந்த நாட்களிலும் அநேகர் இப்பட...

நிந்தை இல்லா ஆசீர்வாதம்

Image
     பரிசுத்த வேதத்தில் சிம்சோனின் பெற்றோர்களைக் குறித்து தியானித்திருப்போம். தகப்பன் பெயர் மனோவா. தாயின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் ஜெபிக்கின்றவர்கள். இவர்களுக்கு சிம்சோனின் பிறப்பு ஒரு அதிசயமாகும். பரலோக தேவன் இந்த அதிசயத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்பாக மலடி என்ற பட்டமும் அவனின்   தாய்க்கு கிடைத்தது. ஆசீர்வாதமும் அதிசயமும் கிடைத்தது. அதற்கு முன்பாக வேதனையும், வருத்தமும், நிந்தனையும் இருந்தது. கொஞ்சம் வருடங்களுக்கு முன்பாக அந்த ஆசீர்வாதம் கிடைத்திருந்தால், அந்த அதிசயம் நடந்திருந்தால், சொந்தங்கள் இனபந்துக்கள் மத்தியில் மலடி என்கின்ற பட்டம் அவளுக்கு கிடைத்திருக்காது. அதனால் வரும் வேதனையும் வருத்தமும் கொஞ்சம் கூட இருந்திருக்காது. ஏன் அவளுக்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பாக இந்த அற்புதம் நடக்கவில்லை? வேதனை கிடைத்த பின்பு ஆசீர்வாதம் கிடைப்பதற்கு என்ன காரணம்? நிந்தையும் ஆசீர்வாதமும் சேர்ந்து கிடைக்க என்ன காரணம்? என்ற எண்ணங்கள் எனக்குள் மேலோங்கி காணப்பட்டது. இதை பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் கொஞ்சம் ஆழமாக பலமுறை தியானித்தேன். சில ஆழ்ந்த இரகசியங்களை பரி...