அசுத்த கனவும் பிசாசின் ஆளுகையும்
தேவனுடைய பிள்ளைகள் அநேகர் தூங்கும்
போது பிசாசு
கொண்டு வரும் அசுத்த
கனவுகளினால் பாதிக்கப்படுகின்றார்கள். சிறியவர்கள், பெரியவர்கள், ஆண், பெண், வாலிபர்கள்,
முதியவர்கள், விசுவாசி, அவிசுவாசி என்று வித்தியாசமின்றி பலர் இந்த கனவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் இரகசியம் என்ன? இந்த கனவை கொண்டு வருவது
யார்? இதனால் பாதிப்பு ஏற்படுமா? ஆசீர்வாதம் தடை ஏற்படுமா? அசுத்த கனவுகளினால் பிசாசு
எப்படி ஆளுகை செய்யும்? போன்றவற்றைக் குறித்து இதில் விரிவாக தியானிப்போம். ஜெபத்துடன் வாசியுங்கள். இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு
மகிமையை செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன
ஊழியங்களுக்காக இரண்டு நிமிடம் ஜெபியுங்கள்.
ஆவி, ஆத்துமாவுடன் பேச அல்லது உணர்த்த பயன்படுத்தும் முறை கனவு, தரிசனம் ஆகும். சின்ன பிள்ளைகள் பாடத்தை
எளிதாக புரிந்து கொள்ள படத்தை காட்டி ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பார்களே அதேபோல் ஆத்துமா
எளிதாக புரிந்து கொள்ள சரீரம் ஓய்ந்திருக்கும்
நேரத்தில் ஆவி ஒரு படத்தை காண்பித்து உணர்த்தும். இதைதான் கனவு, தரிசனம் என்று சொல்லுகின்றோம்.
மூன்று ஆவிகள் கனவை கொண்டு வரும் 1. பரிசுத்த ஆவி 2. மனித ஆவி 3. பிசாசின் ஆவி
சர்வ வல்லமையுள்ள தேவன் ஒரு மனிதனோடு
பேச, சொப்பனம், தரிசனம் போன்றவற்றை பயன்படுத்துகின்றார். அதே போல் பிசாசும் ஒரு ஆத்துமாவில்
களைகளை விதைக்க சொப்பனம், கனவு, தரிசனங்களை பயன்படுத்துகின்றான். தேவனும் ஒரு மனிதனுக்கு
சொப்பனத்தை காட்ட முடியும், அதேபோல் பிசாசும் காட்ட முடியும். தேவன் காட்டினால் அது
பரிசுத்தமாக இருக்கும். பிசாசு காட்டினால் தேவ சித்தத்திற்கு மாறாக அசுத்தமாகவும்,
குழப்பமாகவும், ஆபாசமாகவும், பயத்தை உண்டுபண்ணுவதாகவும் இருக்கும்.
இப்படி பிசாசு கனவுகளை மனிதர்களுக்கு காண்பிக்கிறதினிமித்தம் எளிதாக அவர்களை
தேவ சித்தத்தைவிட்டு பிரிக்க முடியும். களைகளை ஆத்துமாவில் விதைத்து கறைப்படுத்த முடியும்.
இன்னும் சில ”சந்தேக” கனவுகளை காண்பிப்பதினால் குடும்பத்தில் பிரச்சனைகளை கொண்டு வந்து
பிரிக்க முடியும். இதனால் தான் பிசாசு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றான்.
கனவுகளில் பல வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக வாலிபர்கள் அநேகரை ஆபாசமான அசுத்தமான கனவு மூலமாக
பிசாசு தாக்குகின்றான். இந்த தீர்க்கதரிசன செய்திகளில் வாலிபர்களை தாக்கும் ஆபாச கனவுகளை
குறித்து தியானிப்போம்.
யாரோ ஒருத்தியை கனவில் கான்பித்து இவள் தான் உன் எதிர்காலம் என்று அவள் மேல் நினைவை
கொடுத்து காதலில் விழசெய்வதும் அல்லது ஒருத்தியை குறித்து அசுத்த கனவு வந்தவுடன் அவள் மேல் மயக்கத்தை
கொடுத்து அவளுடன் விபச்சாரம் செய்ய தூண்டுவதும் பிசாசின் தந்திரம். கனவுகள் மூலம் சிந்தனையில் மற்றவர்களுடன் தொடர்ப்பு
ஏற்படுகின்றது. அந்த பையன் யார் என்றே தெரியாது, எந்த ஊர் என்பதும் தெரியாது ஆனால்,
அவனை குறித்து கனவு வந்தவுடன் ஒரு ஈர்பு வரும்.
இப்படித்தான் களைகளை சிந்தனையில் பிசாசினால்
விதைக்கப்படுகின்றது.
மேலும், ஒரு ஆபாச கனவு வரும் போது
உணர்ச்சிகள் தூண்டப்படும். இது ஆபாச படம் பார்ப்பதற்கு
சமம். சிலருக்கு யாருடனோ உடலுறவு கொள்வது போல் கனவு வரும். இது விபச்சாரம் செய்வதற்கு சமம். அப்படிப்பட்ட கனவை காண்பிப்பதினிமித்தம் ஆவி கறைப்படுத்தப்படும்.
உணர்ச்சிகள் கறைப்படும். இதன் பின்பு உணர்ச்சிகளை பிசாசு ஆளுகை செய்வான்.
உணர்ச்சிகளை பரிசுத்த ஆவியானவரும் ஆளுகை செய்வார்.
பிசாசும் ஆளுகளை செய்வான். பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்தால் பரிசுத்தமான சிந்தனை
இருக்கும். மனைவியை தவிர மற்ற பெண்கள் மேல் ஈர்ப்பு வராது… வரவே வராது 100 க்கு
100 வராது. ஆனால் பிசாசு ஆளுகை செய்தால் சிந்தனை
அசுத்தமாக இருக்கும். எந்த பெண்களை பார்த்தாலும் யாரை பார்த்தாலும், எப்போது பார்த்தாலும்,
இடம் பொருள் வித்தியாசமின்றி உணர்ச்சி தூண்டப்படும். அல்லது எந்த பையனை பார்த்தாலும்
ஈர்ப்பு ஏற்படும். இது பாவத்தை கொண்டு வரும். இப்படி உணர்ச்சிகளை பிடிப்பதற்காகதான்
அசுத்தகனவுகளை பிசாசு காண்பிக்கின்றான்.
இப்படிப்பட்ட அசுத்த கனவுகள் நமக்கு கிடைக்கவேண்டிய
ஆசீர்வாதத்தை தடை பண்ணும். தொடர்ந்து இக்கனவுகள் வருவதினால் திருமண தடை, குழந்தை பாக்கிய
தடை, பொருளாதார ஆசீர்வாத தடை காணப்படும். இதிலிருந்து விடுதலை பெற ஒரே வழி கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமம்… அவருடைய இரத்தம் ஆகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளாக
சரீரம் முழுவதையும், சிந்தை, மனதை ஒப்பு கொடுக்கும் போது, பிசாசு கிரியை செய்ய முடியாது
. ஒரு நாள் மட்டுமல்ல தினம் தினம் செய்வதால் விடுதலை பெறலாம். ஏனெனில் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும்.
(இந்த செய்தி புரியவில்லை என்றால்
திரும்ப ஒரு முறை நிதானமாக ஜெபம் பண்ணிவிட்டு வாசியுங்கள். ஒவ்வோரு வரியாக தியானியுங்கள்
ஆவியானவர் உதவி செய்வார். இது உங்களுக்கு புரிந்துவிட்டால் உடனே அற்புதம் நடக்கும்)
(பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற
இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE
செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)
அடிக்கடி நரகல் வரும் கனவு பற்றி Pls
ReplyDeletePisasu ottuvadhu pola kanavu yesuvin namathai solli ottum kanavu adhu oduvadhu pol kanavugal
ReplyDeleteஎங்கள் கனவில் இறந்து போனவர்கள் பிரச்சனை குழந்தைபாக்கியம் தடை
ReplyDelete