Posts

Showing posts from 2020

Meditation-10

Image
பாதுகாப்போம் ஜெயித்திடுவோம்     மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாமுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட வேலை ஏதேன் தோட்டத்தை பண்படுத்த வேண்டும் அதை பாதுகாக்க வேண்டும் (ஆதி 2:15) சரி யாரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்? தோட்டத்திற்குள் எந்தவிதமான காட்டு ஜீவன்களும் வராதபடிக்கும் அந்நிய ஜீவன்கள் வராதப்படிக்கும் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஆதாமோ அந்த வேலையை சரியாக செய்யவில்லை. எனவே, காட்டு ஜீவனை சர்ப்பத்தின் வழியாக பிசாசு தோட்டத்திற்குள் புகுந்து, முதலில் ஏவாளையும் பின்பு ஆதாமையும் வஞ்சித்துவிட்டான்.     ”தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்” என்று சத்திய வேத வசனம் கூறுகின்றது (1யோவான் 5:18). தேவ பிள்ளைகளாகிய நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஒவ்வொரு நாளும் பாதுகாக்க வேண்டும். அப்படி நம்மை பாதுகாக்க தவறினால் பொல்லாங்கனான பிசாசு ஆவி, ஆத்துமா, சரீரத்தை தொட்டுவிடுவான். வியாதி, போராட்டம், உபத்திரவங்களை கொண்டு வந்துவிடுவான்.  எனவே, ஒவ்வொரு நாளும் நம்மையும், நம் கு...

Meditation-09

ஐக்கியம் ஏன்?   மண்ணினாலே மனிதனை உருவாக்கிய கர்த்தர் அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்றும், ஏற்ற துணையை உண்டாக்குவேன் என்றும் கூறினார் (ஆதி 2:18) ஏன் மனிதனுக்கு துணை வேண்டும்? ஏன் அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல? ஏனென்றால், ஏதேன் தோட்டத்தின் நடுவில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை உருவாக்கி, அதை புசிக்க வேண்டாம் என்றும், புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்றும் கட்டளையிட்டிருந்தார்.   தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி இருக்கும் வரை எப்பொழுது வேண்டுமென்றாலும் பிசாசு வந்து, வஞ்சித்து அந்த கனியை புசிக்க வைப்பான். அப்படி வரும் நேரத்தில் மனிதன் தனிமையாக இருந்தால் அவனால் மட்டும் பிசாசுடன் போராடி மேற்கொள்ள முடியாது. எனவே, அவன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று துணையை உருவாக்கினார்.   ”ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று வேதம் கூறுகின்றது (பிரசங்கி 4:9). பாவ உலகத்தில் பாவம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.   பாவ உலகத்தில் வாழும் வரை எப்பொழுது வேண்டுமென்றாலும் பிசாசு வஞ்சிப்பான். பாவத்தில் விழவைத்து தாக்குவான்.  எனவேதான...