சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பம்



   தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார். என்னிடத்தில் வாரும் தாமதிக்க வேண்டாம் என்று யோசேப்பு தன் சகோதரர்கள் மூலமாக யாக்கோபினிடத்தில் சொல்லச் சொன்னான் . (ஆதியாகமம் 45:9,10,11) இதைக் கேட்ட யாக்கோபு பெயர்செபாவுக்கு சென்று, தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்கு பலியிட்டு எகிப்துக்கு செல்லலாமா? அல்லது வேண்டாமா? என்று விசாரித்தான். அன்று இரவு தரிசனமான தேவன்: நீ எகிப்து தேசத்திற்குப் போகப்  பயப்பட வேண்டாம். அங்கே உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தம் கொடுத்து அனுப்பினார். (ஆதியாகமம் 46 :1-5) 

    ஈசாக்கின் காலத்தில் ஒரு பெரிய பஞ்சம் தேசத்தில் வந்தது. அப்பொழுது அவனுக்கு தரிசனமான தேவன் எகிப்துக்கு செல்ல  அனுமதி கொடுக்கவில்லை.(ஆதியாகமம் :26 :1- 3) ஆனால், எகிப்துக்கு செல்ல யாக்கோபுக்கு அனுமதி கொடுத்தார். ஏன் அவனுக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? ஈசாக்கை தடுத்த தேவன் யாக்கோபை தடுக்காமல் இருந்ததற்கான காரணங்கள் என்ன?  இஸ்ரவேல் மக்கள் எகிப்துக்கு சென்றதற்கான காரணங்கள் என்ன?

      இஸ்ரவேல் மக்கள் கொஞ்ச ஜனங்களாகவே இருந்தார்கள். மொத்தமே 66 பேர்கள்தான். ஒரு யுத்தம் உண்டானால் மொத்த ஜனங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்பட்டு விடுவார்கள். தேவனுடைய வாக்குத்தத்த சந்ததி அழிக்கப்பட்டுவிடும். அதுமாத்திரமல்ல வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் பலுகி பெருகுவதையும் பிசாசு விரும்பமாட்டான். ஆதலால், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று, அவர்கள் சந்ததியை பாதுகாத்து, பலுகிப் பெருக வேண்டும் என்று சர்வவல்ல தேவன் விரும்பினார். எனவே, யோசேப்பு அதிபதியாக இருந்த எகிப்து தேசத்திற்கு அவர்களை குடும்பமாக அனுப்பினார். இஸ்ரவேல் மக்கள் கானானை விட்டு எகிப்துக்கு பலுகி பெருகுவதற்காக சென்றார்கள். எப்படியாவது சந்ததி பலுகிப் பெருக வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.

   எகிப்திலே இஸ்ரவேல் மக்களின் சந்ததி பலுகிப் பெருகியது. யோசேப்பை அறியாத புதிய இராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும் பலத்தவர்களுமாய் இருக்கின்றார்கள் என்று தன்னுடைய ஜனங்களிடத்தில் சொல்லி, அவர்கள் பெருகாதபடிக்கும், தேசத்தை விட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும் ஒரு உபாயம் பண்ண வேண்டும் என்றும் சொன்னான். 

      அதன்படி, இஸ்ரவேல் மக்களின் பெருக்கத்தினை தடுப்பதற்காக அவர்களை சுமை சுமக்கின்ற வேலையிலும், சாந்தும் செங்கலும் இவைகளை செய்யும் வேலையிலும், வயலில் செய்யும் சகல விதமான வேலையிலும், ஜீவனை கசப்பாக்கும் விதமாக அவர்களை ஒடுக்கினார்கள். மிகவும் கொடுமையாக நடத்தினார்கள். (யாத்திராகமம் 1)     

    எகிப்து என்பது பாவமாகும். பாவத்திலிருந்தாலும் தேவனுடைய சந்ததிப் பெருக வேண்டும் என்று பரலோக தேவன் விரும்புகின்றார். சந்ததிப் பெருக்கம் தேவனுடைய விருப்பம். ஆனால், பிசாசுக்கு அடையாளமாக உள்ள பார்வோன், சந்ததிப் பெருக்கத்தினை விரும்பாமல், அதை தடைச் செய்ய போராடுகின்றான். சந்ததி பெருக்கத்திற்காக குழந்தைகளைக் கொடுத்து ஆசீர்வதிக்க தேவன் விரும்புகின்றார். அதே நேரத்தில் அவர்கள் பெருகுவதை பிசாசு தடுக்கின்றான்.

        இதை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! உங்கள் சந்ததி  பலுகிப் பெருக வேண்டும் என்றும் உங்களுக்கு ஒரு குழந்தைப் பாக்கியம் தர வேண்டுமென்றும் சர்வவல்ல தேவன் விரும்புகின்றார். ஆனால், அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கர்ப்பத்தின் கனி கிடைக்கக் கூடாது என்றும் பிசாசு போராடுவதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

       பரிசுத்த வேதத்தில் ஈசாக்கின் தாய் சாராள், யாக்கோபின் தாய் ரெபெக்காள், யோசேப்பின் தாய் ராகேல், சாமுவேலின்  தாய் அன்னாள், யோவான் ஸ்நானகனின் தாய் எலிசபெத், மற்றும் சிம்சோனின் தாய் இது போன்ற பரிசுத்தவான்களைப் பெற்றெடுத்த ஸ்திரீகள் மலடி என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். அதில் குறிப்பாக ராகேல் மற்றும் அன்னாள் கர்ப்பத்தினை தேவன் அடைத்திருந்தார் என்று வாசிக்கிறோம். (ஆதியாகமம் 30 :2 , 1சாமுவேல்1:5)

         இதை வாசிக்கும் போது நாம் ஆராதிக்கும் தேவன் எகிப்திலிருந்தாலும் சந்ததி பெருக்கத்தினை விரும்புகின்றார். பெறப் பண்ணுகிறவராகிய நான் பெறச் செய்யாமல் இருப்பேனோ? என்று சொன்னவர், பிரசவிக்க பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தை தடுப்பேனோ என்றும் கூறினார்.(ஏசாயா  : 66:9)  அப்படியிருக்க அவர் ஏன் ஒரு சிலரின் கர்ப்பத்தினை அடைத்து இருக்கின்றார். ராகேலின் கர்ப்பத்தினை அடைக்க காரணம் என்னவாக இருக்கும்? அன்னாளின் கர்ப்பத்தினை அடைக்க காரணம் என்ன? என்றெல்லாம் ஒரு சில கேள்விகள் நமக்குள் எழும்பும்.

        நம் தேவனுக்கு இன்னொரு சுபாவம் உள்ளது. அவரிடத்தில் அப்பத்தினை கேட்டால் கல்லை தரமாட்டார். மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கமாட்டார்.(லூக்கா 11 :11) ஆசீர்வாதத்தைக் கேட்டால் சாபத்தினை கொடுக்கமாட்டார். நாம் கர்ப்பத்தின் கனியை கேட்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தையை தருவதைத்தான் தேவன் விரும்புவார். குறைபிரசவத்திலோ, குறைபாடுகளுள்ள  குழந்தையையோ தர விரும்ப  மாட்டார்.   

    பெறப்பண்ணுகின்றவர்  பெறச்செய்யாமல் இருக்கவும், பிரசவிக்க பண்ணுகிறவர் பிரசவத்தை தடுக்கவும் பல காரணங்கள் இருந்தாலும், குறைபாடுள்ள குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று போராடுகின்ற பிசாசின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும் என்பது  ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது, குறைபாடுள்ள குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று போராடுகின்ற பிசாசின் திட்டங்களை உடைத்தெறிந்து, பின்பு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் சர்வவல்ல தேவன் கர்ப்பத்தினை அடைத்திருப்பார்.   

   சரி! குறைபாடுள்ள குழந்தைகள் பூமிக்கு வரக் காரணம்? பிசாசு எப்படி குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க தந்திரமாக கிரியைச் செய்கின்றான்? இதில் பிசாசின் தந்திரங்கள்  என்னென்ன? என்று தேவசமூகத்தில் அமர்ந்திருந்து ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால் சில  சில மறைந்திருக்கும் இரகசியங்கள் வெளிப்படும். சில குடும்பங்களை தலைமுறை, தலைமுறையாக சாபங்கள் தொடர்ந்து வரும். இப்படி வரும் சாபங்கள் வித்தை கறைப்படுத்திக்  கெடுக்கும். கர்ப்பப்பையை கறைப்படுத்தும் இதுவே குறைபாடுள்ள சந்ததியை உருவாக்கும்.    

    இதை மேற்கொள்ள என்னதான் வழி என்று நீங்கள் கேட்கலாம். இப்படி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் சாபங்களை  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயும்,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலேயும் உடைத்தெறிய வேண்டும். இப்படி செய்யும்போது குறைபாடுள்ள சந்ததியை பெற்றெடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ள சாபங்கள் முறியடிக்கப்படும். இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள கறைகள் அழிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படும். பின்பு அடைக்கப்பட்ட கர்ப்பங்கள் திறக்கப்படும். நல்ல ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும். பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

    இந்த தீர்க்கதரிசன செய்தியை வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே! ஒரு கர்ப்பத்தின் கனிக்காக காத்துக் கொண்டிருக்கின்றீர்களா? முதலில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தொடர்ந்து வருகின்ற குறைபாடுள்ள சந்ததிக்கான சாபக்கட்டுக்களை உடைத்தெறியுங்கள். ஆம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உடைத்தெறியுங்கள். பின்பு நல்ல கர்ப்பத்தின் கனியை பெற்றெடுப்பீர்கள். இந்த செய்தியை வாசித்த உங்களையும் உங்கள் சந்ததியையும் பரலோக தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அடைக்கப்பட்ட கர்ப்பம் திறக்கப்படுவதாக. ஆமென்.


இந்தச் செய்தி உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள்.

 (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இது விலையேறப்பெற்ற இரகசியம். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.)

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

எது விபச்சாரம்? எது வேசித்தனம்?

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்