கள்ள உபதேசத்தின் வலிமை



                 கடைசி நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ளப் போதகர்கள், கள்ள கிறிஸ்துக்கள், கள்ள அப்போஸ்தலர்கள் இருப்பார்கள் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. இப்படிப்பட்ட கள்ளர்களின் வாயிலிருந்து புறப்படும் உபதேசம் கள்ள உபதேசமாகும்.  அதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது.  ஏனென்றால், விசுவாசத்தை விட்டு விலகிப் போகச் செய்வதில் பண ஆசைக்கும், உலக ஆசைக்கும், கண்களின் இச்சைக்கும், மாம்சத்தின் இச்சைக்கும் ஒரு வலிமை இருப்பது போல், நம்மை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விட்டுப் பிரிப்பதில் கள்ள உபதேசத்திற்கும் ஒரு வலிமை உள்ளது. அந்த வலிமை எப்படிப்பட்டதாக இருக்கும்  என்றும், ஒரு விசுவாசி மற்றும் திருச்சபைகள் கள்ள உபதேசத்தினால் பாதிக்கப்பட்டால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதனைக் குறித்தும்  இந்த தீர்க்கதரிசன செய்தியில் கொஞ்சம் விரிவாக தியானிப்போம்.
              

     அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். முதலாந்தரம் அவர் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது தேவதூதனைப் போலவும், கிறிஸ்து இயேசுவைப் போலவும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவன் சரீரப் பெலவீனத்தை அசட்டைப் பண்ணவில்லை. பவுலைக் குறித்து மிக மகிழ்ச்சியாக வாஞ்சையாக இருந்தார்கள். இரண்டு கண்களை பிடுங்கி கொடுக்கக் கூடுமானலும் கொடுத்திருப்பார்கள். பவுலே, சாட்சி சொல்லும் அளவுக்கு அவர்கள் நேசம் அதிகமாக இருந்தது.(கலாத்தியர் 4:15) நாட்கள் செல்ல செல்ல கள்ள உபதேசம் அவர்களுக்குள் புகுந்துவிட்டது. குழப்பவாதி அவர்களுக்குள் புகுந்து, கிருபை எது? நியாயப்பிரமாணம் எது? விருத்தசேதனம் எது? என்று குழப்ப ஆரம்பித்துவிட்டான். கள்ள உபதேசத்தின் வலிமை அவர்களை அதிகமாக குழப்பிவிட்டது.
       

   கடைசியில் அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை  சொன்ன பவுலை சத்துருவாகப் பார்க்கின்றார்கள். பிசாசு என்று துணிகரமாக கூறுகின்றார்கள்.  ஆரம்பத்தில் பவுலுக்காக தன் கண்களையும் பிடுங்கி கொடுக்க ஆயத்தமாக இருந்தவர்கள், இப்பொழுது சத்துரு என்று கூறுகின்றார்கள். இதுதான் கள்ள உபதேசத்தின் வலிமை ஆகும். 
      

    இன்றைக்கும் கூட திருச்சபைகளில் இப்படிப்பட்ட கள்ள உபதேசத்தின் வலிமை கிரியை செய்வதை  நம்மால் பார்க்க முடியும். ஆரம்பத்தில் தரித்திரனாக, பரதேசியாக, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவனாக ஒருவன் இருந்திருப்பான். ஊழியக்காரர் அவனுக்கு சுவிசேஷம் சொல்லி இரட்சிக்கப்பட காரணமாக இருந்திருப்பார். இப்பொழுது அவன் இரட்சிக்கப்பட்டுவிட்டான்.  ஊழியக்காரர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் கேட்பான். காணிக்கை என்ன.. தசமபாகம் என்ன… எதுக் கேட்டாலும் கொடுப்பான். நாட்கள் செல்ல செல்ல கள்ள உபதேசம் அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் புகுந்துக் கொள்ளும் போது, தான் இரட்சிக்கப்பட காரணமாக இருந்த ஊழியக்காரரை விரோதியாக பார்ப்பான்.  ”அவர் என்ன பிரசங்கம் செய்கின்றார்?” என்று விரோதமாக பேச ஆரம்பிப்பான் கடைசியில் சபையை விட்டு பிரிந்து செல்வான். இது தான் கள்ள உபதேசத்தின் வலிமை.
      

      இது தேவ ஊழியக்காரர்களோடு ஐக்கியம் கொள்ள விடாது. இது ஊழியக்காரார்களின் ஐக்கியத்தை மாத்திரம் அல்ல தேவனை விட்டே பிரித்துவிடும். பரலோக பாக்கியத்தினை பிடுங்கிவிடும். எனவே, கடைசி கால கள்ள உபதேசத்திற்கு சபை மக்களும், விசுவாசிகளும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் ஊழியக்காரர்களையும் விசுவாசிகளையும் அது பிரித்துவிடும். ஊழியக்காரர்கள் மூலமாக இரட்சிக்கப்பட்டவன் இவரெல்லாம் ஊழியக்காரரா என்று கேட்கும் அளவுக்கு மாற்றிவிடும். எனவே, கடைசிக் கால கள்ள உபதேசம் சபைக்குள் வராதபடிக்கு விழிப்புடன் ஜெபிப்போம்.  அதற்கு எதிர்த்து நிற்போம்.


(இத்தீர்க்கதரிசன செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள். மகிமை மண்ணான மனிதனுக்கு அல்ல தேவனுக்கே.  எனக்கு அல்ல கர்த்தருக்கே  தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக  இரண்டு நிமிடம் ஸ்தோத்திரம் செலுத்தி ஜெபம் செய்யுங்கள்.  உங்கள் Comment –ஐ பதிவு செய்யுங்கள் மற்றும் நண்பர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். நீங்களும் இந்த செய்தியை WHATS APP - ல் தினமும் பெற  Prophetic Words Ministries  8608833150, 8608096748)

Switch To ENGLISH    HINDI

தினமும் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை தவறாமல் பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற எங்கள் Telegram Channel-ஐ Subscribe செய்யுங்கள். Click Here  

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக பரிசுத்த வேதத்தின் ஆழ்ந்த இரகசியங்களை தீர்க்கதரிசன செய்திகளாக எல்லாரும்  எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்  E-Magazine ஆக வெளியிடப்படுகின்றது. இது உங்கள் Mobile Phone-ல் வாசிப்பதற்கு வசதியாக PDF மற்றும் JPEG Format-ல் அனுப்பபடுகின்றது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள      E-Magazine-களை வாசிக்கவும் அதை Download செய்யது கொள்ளவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். தீர்க்கதரிசன செய்திகளை வாசித்து தேவாசீர்வாதம் பெற்றுக்கொள்ளுங்கள். Click Here 

தீர்க்கதரிசன தியானங்களை  You tube –ல் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் Click Here 

தினமும் இதில் அனுப்பப்படும் தீர்க்கதரிசன செய்திகளை பற்றிய Notification-ஐ WHATS APP – ல்  பெற இதை கிளிக் செய்யுங்கள்.  Click Here 




தீர்க்கதரிசன தியானங்களை You tube –ல் கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் Click Here

Comments

Most Popular Post

Registration now

ஆபாச படத்தில் பிசாசின் தந்திரங்கள்

ஜெபத்தில் அமைதி

திறவுக்கோல் ஜெபக்குறிப்புகள்

கானானியர் ஆவி

சீரழிக்கப்பட்டவள்

அழுத்தம் வேண்டாம்

வரன் தேடுபவர்களுக்கு..